முனைவர் எ.மு.ராஜன்
புதுச்சேரி, எல்லப்பிள்ளைச் சாவடி கிராமத்தில் முருகேசன் – பவுனாம்பாள் தம்பதியருக்கு 29.10.1951-இல் பிறந்தார். தந்தை ஓர் ஆலைத் தொழிலாளி. எல்லப்பிள்ளைச் சாவடி, ரெட்டிப்பாளையம், முத்த ரையர்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்த ராஜன், கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புகுமுகக் கல்வியை முடித்தார். புதுவை தாகூர் கலைக் கல்லுரியில் பொருளாதாரத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டமும், அதே கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) பட்டமும் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் இள முனைவர் (எம்.ஃபில்.)…
