தமிழறிஞர் வ.தேனப்பன்
புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி பி.அழகாபுரியில் தே.வள்ளியப்பன் -சேதுக்கரசி தம்பதியருக்கு 28.10.1950 அன்று பிறந்தார். 8ஆம் வகுப்பு படிக்கும் போதே ‘என் கனவு’ எனும் முதல் சிறுகதையை எழுதினார். மதுரை தியாகராசர் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்தார். தொடர்ந்து பிஎச்.டி., பி.சி.டி.எச்.இ., சி.ஜெ., சி.ஐ.ஏ., டி.சி.டி. போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார். ஒன்பது நகரக் கோயில்களை ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ‘நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை’ என்ற ஆய்வையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்…
