அறிஞர்

  • பண்டிதர் ம.கோபாலகிருஷ்ண ஐயர்

    ம.கோபாலகிருஷ்ண ஐயர், திருச்சி அருகேயுள்ள லால்குடி யில் மகாதேவன் – பிரவர்த்த ஸ்ரீமதி தம்பதியர்க்கு 1878-இல் பிறந்தார். தந்தை மதுரை நீதி மன்றத்தில் சிரஸ்தாதார். ம.கோ. ஐயர் உரிய வயதில் தர்மாம்பாளைமணந்து, நான்கு மகள்களையும், இரு மகன்களை யும் பெற்றார். தமது தாய்வழிப் பாட்டனா ரையே தம் குருவாகக் கொண் டார். இவர், மதுரை தமிழ்ச் சங்க நிர்வாக அங்கத்தினர், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத் தின் நிறுவனர், திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்;…

  • ச.கந்தையபிள்ளை

    யாழ்ப்பாணம், இருபாலை அடுத்த கோவை என்றழைக்கப் படும் கோப்பாய் எனும் ஊரில், சபாபதி பிள்ளை – காமாட்சி அம்மையார் தம்பதியருக்கு 1880 ஆனி மாதம் பிறந்தார். கோப்பாயிலுள்ள ஸி.எம். எஸ். பள்ளியிலும், கண்டிக்குளி யிலுள்ள பரி.கோவான் கல்லூரி யிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந் தார். சிற்.கைலாயப் பிள்ளை யிடத்து தமிழ் இலக்கண, இலக் கியங்கள் மட்டுமின்றி தருக்க நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். ச.கந்தைய பிள்ளை தமது 28-வதுவயதில் கந்தரோடை க.தியாகராசப் பிள்ளையின் மகளாகிய செல்லம்மாளைத் திருமணம் செய்து…

  • சீகன்பால்கு

    ஜெர்மனி, சக்சோனியாவில் புல்ஸ்நிட்ஸ்-ல் செல்வந்தர் பர்த்தலோமியா- கேத்தரீனா தம்பதியருக்கு 24.06.1683-இல் பிறந்தார். சீகன் பால்குவின் 10-வது வயதில் தாயார், 11-வது வயதில் தந்தை, 19-வது வயதில் மூத்த சகோதரி அன்னாள், 22-வது வயதில் அடுத்த சகோதரி ரெஜினா என அடுத்தடுத்து இறந்ததால் பாதிக்கப்பட்டார். இறையியலில் நாட்டம் கொண்டார். ஹெர்மன் பராங்கே என்பவரின் உதவியினால் இறையியல் கல்வியை ஹல்லே பல்கலைக்கழகத்தில் படித்தார். திருமறை கருத்துகளை தெளிவுறக் கற்றார். ஆன்மிகத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்….

  • பண்டிதர் க.அயோத்திதாசர்

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்த கந்தசாமி தம்பதியருக்கு 20.05.1845 அன்று பிறந்தார். இயற்பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன், பல்வேறு ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்திருந்தார். இன்று நாம் படிக்கும் திருக்குறள் பரிமேலழகர் உரை இவர் பாதுகாத்து வைத்திருந்தது தான். அயோத்திதாசர் தந்தையின் பணி காரணமாக அவர்தம் குடும்பத்தினர் நீலகிரிக்கு குடி பெயர்ந்தனர். இவர், சென்னையில் வசித்த காலத்தில் பத்ர தேசிகானந்தர், அயோத்திதாச கவிராய பண்டிதர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை மட்டுமின்றி சித்த மருத்துவம்,…

  • எம்.எஸ்.பூரணலிங்கம்

    திருநெல்வேலி மாவட்டம், முந்நீர்ப்பள்ளம் அருகில் தெப்பக்குளம் பகுதியில் சிவசுப்பிரமணியப் பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 24.05.1866 அன்று பிறந்தார். முந்நீர்பள்ளம் திண்ணைப் பள்ளியிலும், மேலைப்பாளை யம், தருவை, சிந்துபூந்துறை ஆகிய ஊர்களிலுள்ள பள்ளி களிலும் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை கிறித்துவக் கல்லூரியில் எம்.ஏ., எல்.டி. பட்டங்களைப் பெற்றார். 1890-இல்திருமணம். மனைவி: தாயம்மை. அவருக்குப் பிள் ளைப் பேறு இல்லாததால் 1903 -இல் பூரணத்தம்மாளை மணந்தார். இவருக்கு சிவசுப்பிர மணியன், இளம்பூரணம் எனும் இரு மகன்கள், வள்ளியம்மை என்றொரு மகள்….

  • பொன்.பாண்டித்துரைச் சாமித்தேவர்

    இராமநாதபுரம, இராஜ வீதியில் உள்ள கௌரிவிலாசம் அரண்மனையில் வள்ளல் பொன்னுச்சாமித் தேவர் -முத்து வீராயி நாச்சியார் தம்பதியருக்கு 21.03.1867-இல் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் உக்கிரபாண்டியன் பாண்டித்துரை. இவர்தம் மூன்றாம் வயதில் (1870இல்) தந்தையார் காலமானார். இராமநாதபுரம் சேஷாத்திரி ஐயங்கார் வளர்த்தார். இராமநாதபுரம் அழகர் ராஜூ, சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆகியோர் இவருக்குத் தமிழ் கற்பித்தனர். இராமநாதபுரம் வக்கீல் வெங்கடேச சாஸ்திரி ஆங்கிலம் கற்பித்தார். இராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். ஜமீன் பொறுப்பை 1884-இல் ஏற்றார்….