அறிஞர்

  • அ.சிதம்பரநாதன்

    கும்பகோணம் அமிர்தலிங்கம்-தையல்நாயகி இணையர்க்கு 3.4.1907 அன்று பிறந்தார். குடந்தை ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பயின்று தமிழில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, ‘ஜி.யூ. போப், பிராங்க்ளின்’ தங்கப் பதக்கம் பெற்றார். 1928-ல் சென்னைப் பல்கலைக்கழக எழுத்தராகவும், பிறகு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். துறைத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை அரசு முகமதியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். 3 ஆண்டு களுக்குப் பிறகு பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றத்…

  • அ.சிவ.சகஜானந்தம்

    ஆரணி அருகிலுள்ள மேல் புதுப்பாக்கம், அண்ணாமலை -அலமேலு தம்பதியருக்கு 27.01.1890-இல் பிறந்தார். 8-ம் வகுப்புவரையே படித்த இவர், தமது 16-ம் வயதில் துறவு பூண்டார். எனினும் இவரை ஆலயங்களுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, காஞ்சி நரசிங்கபுரம் தட்சிணாசாமி சுவாமியிடம் சந்நியாசம் பெற்று, சென்னை வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் ஞானம் பெற்று, தன் பெயரை ‘சகஜாநந்தம்’ எனப் மாற்றிக்கொண்டார். 1910-இல் ‘நந்தன்’ எனும் பெயரில் மத சேவையைத் தொடங்கினார். ‘நந்தனார் மடம்’ உருவாக்கினார். ‘நந்தனார் ஆரம்பப் பள்ளி’யைத் தொடங்கினார்….

  • பாபநாசம் சிவன்

    தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள போலகம் கிராமத்தில் வசித்த இராமாமிருதமய்யர் – யோகாம்பாள் தம்பதிக்கு 26.9.1890 அன்று பிறந்தார். இயற்பெயர்: இராமசர்மா. ஏழாம் வயதில் தந்தையை இழந்தார். குடும்ப வறுமை காரணமாக, தாயார் தன் குழந்தைகளுடன் தன் அண்ணன் வசித்த திருவனந்தபுரம் சென்று கால் ரூபாய் வாடகை வீடு பிடித்து தங்கினர். அம்மாவுக்கு இசை ஞானம் இருந்ததால் அவரை வற்புறுத்திப் பாடச் சொல்லி பாடல்களையும் கீர்த்தனைகளையும் கற்றுக் கொண்டார். அங்கிருந்த சமஸ்கிருதப் பாடசாலையில் சேர்ந்து ஏழு வருடப்…

  • பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

    நெல்லை மாவட்டம், சிக்கநரசய்யன் எனும் சிற்றூரில் சரவணப் பெருமாள் – பாப்பம்மாள் தம்பதியருக்கு 12.10.1891 அன்று பிறந்தார். திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கல்வி கற்றார். 1912-இல் பி.ஏ. பட்டம் பெற்றார். இவ் வாண்டு, எழுத்தாளர் இராஜ சுந்தரம் மகள் சிவகாமியுடன் இவருக்குத் திருமணம் நடை பெற்றது. 1914-இல் பி.எல். பட்டம் பெற்று, 1922 வரை திருவனந்த புரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் இவருக்கு கே.என்.சிவராச பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மகாகவி…

  • வெ.சாமிநாதசர்மா

    இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில், முத்துசுவாமி ஐயர் பார்வதி தம்பதியருக்கு 17.09.1895 அன்று பிறந்தார். செங்கல்பட்டு நேடிவ் உயர் நிலைப்பள்ளியில் படித்ததோடு இவருடைய படிப்பு முடிவுக்கு வந்தது. தந்தை மூலமாக ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றார். 1914-இல் (14வது வயதில்) ‘சென்னை செந்தமிழ்ச்சங்கம்’ நிறுவினார். வட்டிக்கடை, சுருக்கெழுத்துப் பள்ளி, ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றினார். 17-வது வயதில் ‘இந்துநேசன்’ இதழில்…

  • கி.ஆ.பெ.விசுவநாதம்

    திருச்சி பெரியண்ணப்பிள்ளை – சுப்பம்மாள் தம்பதியருக்கு 16-ஆவது பிள்ளையாக 11.11.1899 அன்று பிறந்தார். 1904-இல் தனது ஐந்தாவது வயதில் மருதமுத்து கோனாரின் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து பத்து வயது வரை பயின்றார். அப்போது மொழிக் கல்வியையும், இலக்கியக் கல்வியையும் கற்றார். 1915-இல் தமது 16-வது வயதில் திரிசிரபுரம் சைவ சித்தாந்த சபையில் உறுப்பினராகி தமது 18-ஆவது வயதில் அதன் துணை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்கினார். 1920-இல் தனது 21-ஆவது வயதில் ‘நீதிக் கட்சி’யில் உறுப்பினரானார். 1938-இல்…

  • அ.கி.பரந்தாமனார்

    சென்னை மாநகருக்கு அருகிலுள்ள அல்லிக்குழியில் வசித்த கிருஷ்ணசாமி முதலியார் – சிவக்கியானம்மாள் இணையருக்கு 15.7.1902 அன்று பிறந்தார். அ.கி.ப. 1921-இல் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் 1925-இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், இளங்கலைப் படிப்பைச் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். பின்னர் 1929-இல் தனியாக முதுகலையில் தமிழ் இலக்கியமும் தென்னிந்திய வரலாறும் எடுத்து படித்து முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். மேலும் 1931-இல் சிதம்பரத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1931-இல்…

  • வெள்ளியங்காட்டான்

    கோவை மாவட்டம், காரமடை அருகிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் 21.8.1904 அன்று என்.கே.ராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட வெள்ளியங்காட்டான் பிறந்தார். இவரது தந்தை நிலமற்ற கூலி விவசாயி. திண்ணைப் பள்ளியில் மூன்று ஆண்டு காலம் மட்டுமே பயின்றார். கோவையில் தையல்கலை பயின்றார். 1924-இல் கண்டியூர், சிலீயூர் போன்ற கிராமங்களில் தங்கியிருந்து தையல் தொழில் செய்தார். பகல் முழுவதும் தையல் வேலை செய்துவிட்டு, மாலை நேரங்களில் சில மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். 1930-இல் குட்டியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். வசந்தாமணி, நளினி…

  • வ.வே.சு.ஐயர்

    திருச்சி, வரகநேரி வேங்கடேச ஐயர் – காமாட்சி அம்மாள் தம்பதியருக்கு 02.04.1881-இல் பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1894-இல் எஃப்.ஏ. படித்தார். படிக்கும்போதே அத்தை மகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பின் 1899-இல் பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரி யில் பி.எல். பட்டம் பெற்று 1901 முதல் திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1907-இல் லண்டன் சென்று லிங்கன் சட்டக் கல்லூரியில் பார்-அட்-லா படிப்பில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய…

  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

    கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றத்தில் முத்துக்கருப்பன் – சிகப்பி தம்பதியர்க்கு 16.10.1881-இல் பிறந்தார். சிறுவயதில்காய்ச்சல் நோய் தாக்கியதால் இடது கை, இடது கால் வலுவிழந்ததினால் ஏழு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து ஏழு மாதங்களே பயின்றார். 14-ஆம் வயதில் இளம்பிள்ளை வாத நோயினால் ஊன்றுகோல் உதவியுடன் தான் நடக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. அரசஞ்.சண்முகனார் இவரது இல்லத்தில் தங்கி தமிழ் நூல்களைப் போதித்தார். தருவை நாராயண சாஸ்திரியிடம் வட மொழியையும், காரைக்குடி சொக்கலிங்கத்திடம் சைவ சித்தாந்தப்…