அறிஞர்

  • ரா.பி.சேதுப்பிள்ளை

    திருநெல்வேலிச் சீமையில் கார்காத்த வேளாளர் மரபில் தோன்றிய பிறவிப்பெருமாள் பிள்ளைக்கும் சொர்ணத்தம் மாளுக்கும் 02.03.1886 அன்று பிறந்தார். இவருக்கு முன் பிறந்த ஒன்பது ஆண் குழந்தைகளும் ஒவ்வொன்றாக இறக்க, பத்தாவதாகப் பிறந்த பெண் குழந்தை மட்டும் எஞ்சியது. ஆண் குழந்தை வேண்டி ஐந்தாண்டு சேதுக் கடலாடி இராமேஸ்வரப் பெருமானை வழிபட்டு பிறந்ததால் இவருக்கு ‘சேது’ எனப் பெயரிட்டனர். சேதுவுக்கு ஐந்து வயது நிரம்பிய போது அவரது சகோதரியும் இறந்தார். 1901-இல் ஐந்தாவது வயதில் உள்ளூரிலிருந்த திண்ணைப் பள்ளியில்…

  • வ.வே.சு.ஐயர்

    திருச்சி, வரகநேரி வேங்கடேச ஐயர் – காமாட்சி அம்மாள் தம்பதியருக்கு 02.04.1881-இல் பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1894-இல் எஃப்.ஏ. படித்தார். படிக்கும்போதே அத்தை மகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பின் 1899-இல் பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரி யில் பி.எல். பட்டம் பெற்று 1901 முதல் திருச்சி நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1907-இல் லண்டன் சென்று லிங்கன் சட்டக் கல்லூரியில் பார்-அட்-லா படிப்பில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய…

  • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

    கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றத்தில் முத்துக்கருப்பன் – சிகப்பி தம்பதியர்க்கு 16.10.1881-இல் பிறந்தார். சிறுவயதில்காய்ச்சல் நோய் தாக்கியதால் இடது கை, இடது கால் வலுவிழந்ததினால் ஏழு வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து ஏழு மாதங்களே பயின்றார். 14-ஆம் வயதில் இளம்பிள்ளை வாத நோயினால் ஊன்றுகோல் உதவியுடன் தான் நடக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. அரசஞ்.சண்முகனார் இவரது இல்லத்தில் தங்கி தமிழ் நூல்களைப் போதித்தார். தருவை நாராயண சாஸ்திரியிடம் வட மொழியையும், காரைக்குடி சொக்கலிங்கத்திடம் சைவ சித்தாந்தப்…

  • கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம்

    தஞ்சாவூர் மாவட்டம், மோகனூர் கிராமத்தில் அரங்கசாமி பிள்ளை – தருமாம்பாள் தம்பதியருக்கு 1886 மார்கழித் 5-ஆம் நாள் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்குப் பின், தூய பேதுரு கல்வி நிலை யத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். அப்போது இவருக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர், பின்னாளில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை நிறுவிய த.வே.இராதாகிருஷ்ணன். இங்கு தமிழாசிரியராகப் பணியாற்றிய ‘குயிலையா’ ஆர்.சுப்பிரமணிய அய்யர் இவருக்கு தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டினார். தமது 24-ஆம் வயதில் (1910) தனது தமிழாசிரியருக்குத் தான்…

  • பேராசிரியர் கா.சு.பிள்ளை

    திருநெல்வேலியில், காந்திமதிநாதப் பிள்ளைக்கும் மீனாட்சி அம்மையாருக்கும் 05.01.1888 அன்று பிறந்தார். மூன்றாண்டுகள் திண்ணைப் பள்ளியில் கற்றார். நான்காம் வகுப்பில் பள்ளியில் முதல்வராகவும், ஏழாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல்வராகவும் தேறினார். 1906-இல் நடை பெற்ற பல்கலைக்கழகத் தேர்விலும் முதல் பரிசு பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரி யில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்றார். 1910-இல் முதன்மையாக வென்று பவல்மூர்கெட் என்ற பெரியார் அமைத்த ‘தமிழாராய்ச்சிப் பரிசு’ பெற்றார். 1913-இல் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக்…

  • சோழவந்தான் அரசஞ்சண்முகனார்

    மதுரை, சோழவந்தான் அரசப்பிள்ளை – பார்வதியம் மாள் தம்பதியருக்கு 15.9.1868 அன்று பிறந்தார் அரசஞ் சண்முகனார். இயற்பெயர் சண்முகம். ஐந்து வயதில் திண்ணைப்பள்ளி ஆசிரியர் அழகர்சாமியிடம் கல்விப் பயிலத் தொடங்கினார். 13-ஆம் வயதில் ‘சிதம்பர விநாயகர் மாலை’ எனும் முதல் நூலை இயற்றத் தொடங்கினார். 16-ஆம் வயதில் தந்தை கால மானார். 18-ஆம்வயதில் சோழ வந்தான் சித்த மருத்துவர் மகள் காளியம்மையை மணந்தார். 1890-இல், 22-வது வயதில் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்து 12…

  • தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர்

    மதுரைஅருகிலுள்ள விளாச்சேரி எனும் ஊரில், கோவிந்த சாஸ்திரி – இலட்சுமி தம்பதியருக்கு 06.07.1870 அன்று பிறந்தார். இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரி. உயர்கல்வியை பசுமலையில் பயின்ற இவர், மதுரைக் கல்லூரியில் எப்.ஏ. முடித்து, பின்னர் இப்போது கிறித்துவக் கல்லூரி என அழைக்கப்படும் மில்லர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். மகாவித்வான் சு.சபாபதியிடம் முறையாக தமிழ் பயின்று, 20 வயதுக்குள் தமிழில் ஆழ்ந்த அறிவு பெற்றார். 1893-இல் மில்லர் கல்லூரியிலேயே தமிழாசிரியர் ஆனார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரிய…

  • சதாவதானி செய்குதம்பி பாவலர்

    சதாவதானி’ செய்குதம்பி, கோட்டாறு (நாகர்கோவில்) பகுதியிலுள்ள இளங்கடையில் பக்கீர் மைதீன் சாகிபு – ஆமினா தம்பதியருக்கு 31.7.1874 அன்று பிறந்தார். ஐந்து வயதில் அரபு கற்றார். எட்டு வயதில் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். குடும்ப வறுமை காரண மாக நான்காம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார். தந்தைக்கு உதவியாக பாரம்பரியத் தொழிலான நெசவுத்தொழிலில் ஈடுபட்டார். இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டை அறிந்த தமிழ் ஆசான் நாராயண அண் ணாவியார்,காணிக்கை எதுவும் வாங்காமல் தமிழ்…

  • சி.கே.சுப்பிரமணிய முதலியார்

    கோவை, திருப்பேரூர் கந்தசாமி முதலியார் – வடிவம்மை இணையருக்கு 20.02.1878-இல் பிறந்தார். கோவையில் இடைநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்து, 1898-இல் மேற்படிப்புக்காக தனது தாயாருடன் சென்னைக்குச் சென்று அரசினர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. தத்துவம் படித்தார். தமிழில் சென்னை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று ‘பிராங்க்லின்’ தங்கப்பதக்கம் பெற்றார். அப்பொற்பதக்கத்தை திருப்பேரூர்த் திருக்கோயில் குடமுழுக்கின்போது பட்டிப் பெருமானுக்கு காணிக்கை அளித்து விட்டார். 1898-இல் சேலம் கங்கை வல்லி ஜமீன்தார் கனகசபாபதி முதலியாரின் மகள் மீனாட்சியைத் திருமணம்…

  • பேராசிரியர் மு.இராகவையங்கார்

    இராமநாதபுரத்தில் சதாவ தானி முத்துச்சாமி ஐயங்காரின் மகனாக 26.07.1878 அன்று மு.ராகவையங்கார் பிறந்தார். இவர்தம் 16-வது வயதில் தந்தையார் இறந்து விடவே பாண்டித்துரைத் தேவரின் ஆதரவினாலும், ஊக்குதலி னாலும் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தார். பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியபோது இவரை உடன் அழைத்துச் சென்று, அங்கு சங்க கலாசாலையில் உபாத்தியாயராகவும், அடுத்த ஆண்டு தொடங்கிய ‘செந் தமிழ்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் நியமனம் செய் தார். பின்னர் பதிப்பாசிரியர் ஆக்கினார். மு.இராகவையங்கார் ‘செந்…