முனைவர் கதிர் முருகு
புதுக்கோட்டை பொன்னமராவதி வேகுப்பட்டியில் கதிரேசன் – மீனாள் தம்பதியருக்கு 01.10.1971அன்று பிறந்தார். இவரது மூன்றாம் வயதில் தந்தை மாரடைப்பால் காலமானார். தாயார் தோசை சுட்டு விற்று தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்றி வளர்த்தார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலைச் சிவபுரி -கணேசர் செந்தமிழ்க் கல்லூரி யில் பி.லிட். (இளங்கலை தமிழ் இலக்கியம்), எம்.ஏ., எம்.ஃபில், பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடவியலில் பட்டயம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டம் பெற்றார். 1999-இல் சென்னை அம்பத்தூர்…
