அறிஞர்

  • மு.முத்துவேலு

    மதுரை சிலைமலைப்பட்டி முனி யப்பன் – முத்தரசியம்மாள் தம்பதியருக்கு 10.03.1961 இல் மு.முத்துவேலு பிறந்தார். சென்னை இலயோலா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் முதல் மாணவர் தேர்ச்சிக்கான தங்கப் பதக்கமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் எம்.ஏ. பட்டமும், ‘சட்டத்தமிழ்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். பி.எல். எனும் சட்டவியல் பட்டமும் பெற்றார். மேலும் ‘இதழி யல்’,’ஆட்சித்தமிழ்’ ஆகியவற்றில் சான்றிதழ், பட்டயம் பெற்றார். பின்னர் வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியிலும், சென்னை…

  • முனைவர் சந்திரா கிருட்டிணன்

    கன்னியாகுமரியில் 1961-இல் பிறந்தார். தந்தை அ.சிவதாணு, தாயார் சி.மீனாட்சி. புதுமுக வகுப்பை பி.எஸ். ஜி.ஆர். கிருட்டிணம்மாள் மகளிர் கல்லூரியில் படித்த இவர், கோவை தவத்திரு சாந்த லிங்க அடிகளார் கல்லூரியில் பி.லிட். (தமிழ்), எம்.ஏ. (தமிழ் இலக்கியம்), எம்.ஃபில், பிஎச்.டி. என பட்டப் படிப்பு படித்தார். ‘கோவைகிழாரின் தெய்வங்களின் புலம்பல்: ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டத்தையும், ‘தொல்காப்பியம் செய்யுளியலும் யாப் பருங்கல விருத்தியும் ஒப்பாய்வு’ என்ற தலைப்பில் பிஎச்.டி. பட்டத்தையும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்…

  • பேராசிரியர் ஔவை நிர்மலா

    சிதம்பரம் புவனகிரியில் 10.08.1962 இல் பிறந்தார். இவருடைய தந்தை சென்னையில் இரயில்வேயில் பணிபுரிந்ததால் சென்னையில் குடியேறினர். வடசென்னையிலுள்ள பாரதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புகுமுக (அறிவியல்) கல்வியும், வேதியியல் பாடப் பிரிவில் பட்டப் படிப்பும், இராணிமேரி கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையில் முனைவர் மா.செல்வராசன் நெறியாள் கையில்’அண்ணாவின் படைப்புகளில் மகளிர்’ என்ற தலைப்பில் இளமுனைவர் பட்டமும், முனைவர் அ.அ.மணவாளன் நெறியாள்கையில் ‘தமிழிலக்கியத்தில் மூப்பும் இறப்பும்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டமும்…

  • முனைவர் ரா.ஜெயராமன்

    திண்டுக்கல் பாலப்பநாயக்கன்பட்டியில் சி.இராமசாமி – பாப்பா தம்பதியருக்கு 1963-இல் பிறந்தார். துரைகமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மதுரை யாதவா கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பேராசிரியர் மோ. இசரயேல் நெறிகாட்டுதலில் ‘சேனாவரையர் உரைநெறி’ என்ற ஆய்வேட்டை பணித்து ஆய்வியல் நிறைஞர் பட்டமும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் எஸ். ஆரோக்கியநாதன் நெறியாள் கையில் ‘தொடர்மொழி இலக் கண அடிப்படைகள்’ என்ற ஆய்வேடு வழங்கி முனைவர் பட்டமும்…

  • டாக்டர் காதர் இப்ராஹிம்

    இராஷாதுகான் – தஜுன்னியம்மாள் தம்பதியருக்கு 10.5.1963 அன்று பிறந்தார். இவரது தந்தை மலாயாவையும், தாயார் இந்தியாவையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை கணக்காய்வாளர். கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியிலும், பின்னர் பினாங்கு ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப் பள்ளியிலும் தம் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்பு, கோலாலம்பூர் சுங்காய் பீசி தமிழ்ப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் கல்வி கற்றார். தனது இடை நிலைக் கல்வியை டத்தோ லொக்மான் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்தார். மூளை ஆராய்ச்சி கழகத்தில் பயின்று மூளையியலில்…

  • இமையம் எழுத்தாளார்

    கடலூர் திட்டக்குடி மேல் ஆதனூர் கிராமத்தில் வெங்கட்டன் – சின்னம்மாள் தம்பதியருக்கு 10.03.1964 இல் பிறந்தார். இயற்பெயர்: வெ.அண்ணாமலை. ஆதனூர், கழுதூர், சேப்பாக்கம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்த இமையம், திருச்சி அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டத்தையும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். தற்போது கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், இலங்கியனூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிகிறார்….

  • பேராசிரியர் அ.ராமசாமி

    மதுரை உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தச்சபட்டி கிராமத்தில் 17.02.1959-இல் பிறந்தார். அம்மாவின் சித்தப்பா படுத்தபடுக்கையாக இருந்தபோது அவருக்கு விராட பர்வம், சக்கரவர்த்தி திருமகன், ஆதி பர்வதம் ஆகியவற்றை படித்துச் சொல்வார். அம்மாவின் விதவை சின்னம்மாக்களுக்கு புராண இதிகாசப் புத்தகங்களைப் படித்துச் சொல்வார். இப்படி யாக இவரது புத்தக வாசிப்பு தொடங்கியிருக்கிறது. அமெரிக்கன் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட் டமும் பெற்றார். இப்பல்கலைக் கழகத்திலேயே ‘நாயக்கர் காலத் தமிழ் இலக்கியங்கள் காட்டும்…

  • பேராசிரியர் நா.இளங்கோ

    புதுவையில் ப.நாகமுத்து -நா.வர்ணமுத்து தம்பதியருக்கு 29.04.1959 அன்று பிறந்தார். தந்தை தபால்காரர். புதுவையில் பள்ளிக் கல்வி பயின்று,1979-இல் தமிழகத்தின் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பி.லிட். பட்டம் பெற்றார். 1981-இல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் ‘முதல் குறள் ஆய்வு’ எனும் தலைப்பில் இளமுனைவர் பட்டம் பெற்றார். பின்னர், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் ‘நாட்டுப்புறக் காதல் பாடல்களும் அகப்பொருள் மரபு…

  • பேராசிரியர் தே.ஞானசேகரன்

    திண்டுக்கல் வத்தலக்குண்டு சாந்திபுரம் கிராமத்தில் சா.தேவராஜ் – கு.சிவனம்மாள் (என்கிற) ஞானம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 12.05.1960-இல் பிறந்தார். விராலிமாயன்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியிலும், வத்தலக்குண்டு அரசு உயர் நிலைப்பள்ளியிலும் கல்வியைக் கற்றார். 1977-இல் மதுரை வஃக்ப் போர்டு கல்லூரியில் பி.யூ.சி., முடித்து, அதே கல்லூரியில் 1981-இல் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார். 1983-இல் மதுரை யாதவர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ‘வத்தலக்குண்டு வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும்…

  • வெ.சாரதாம்பாள்

    திண்டுக்கல் நத்தம் இரா. செல்லையா – செ.சங்கரம்மாள் தம்பதியினருக்கு 15.7.1956 அன்று பிறந்தார். நத்தம் (நகராட்சி) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யில் அப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, மதிப்பெண் பலகையில் அவரது பெயர் இன்றளவும் இடம் பெற்றிருக்கிறது. மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘வேட்டுவக் கவுண்டரின் குலச்சடங்குகள்’ என்ற தலைப்பில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். ‘தமிழ்ச்செம்மல்’ தமிழண்ணல் வழிகாட்டுதலில், ‘சங்க இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள்’…