அறிஞர்

  • பேராசிரியர் சு.தில்லைவனம்

    23.12.1955-இல் பிறந்தவர். எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.எச்டி. பட் டங்களைப் பெற்றவர். 1980-இல் தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1980-85இல் காரைக்கால் அரசு மகளிர் கல்லூரியிலும், 1985-2007இல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியிலும் பணியாற்றி, 2007 முதல் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற் படிப்பு மையத்தில் பணியாற்றுகிறார். ‘அரிக்கமேடு ஆய்வு காட்டும் பண்டைத் தமிழ்ச் சமு தாயம்’ என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. ‘பழந்தமிழர்நாகரிகச்சின் னம் அரிக்கமேடு’, ‘புதுவை மாநிலத் தமிழ்…

  • முனைவர் இரா.பாலசுப்பிரமணியன்

    மதுரை எழுமலை கிராமத்தில் சொ.ப. இராமநாதன் – இரா.அலமேலு தம்பதியருக்கு 10.06.1954-இல் பிறந்தார். மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். தமிழ் முதுகலைப் படிப்பில் பல்கலைக்கழக முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார். ஆய்வியல் நிறைஞர் படிப்பையும் அங்கேயே தொடர்ந்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா பல் கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தமிழ்த் துறைத் தலைவர் ஆனார்….

  • பேராசிரியர் மா.சா.அறிவுடைநம்பி

    மதுரையில் சாம்பசிவனார் – ச.மனோன் மணி தம்பதியருக்கு 06.08.1954 இல் பிறந்தார். தியாகராசர் கல்லூரியில் படித்து 1974-இல் இளநிலை கணிதம் பட்டம் பெற்றார். 1976-இல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘திருநாவுக்கரசர் தேவாரத் தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். 4.4.1977-இல் (திருநெல்வேலி) கிரிஜாவை சீர்திருத்த திரு மணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள். தமிழ்ப்…

  • பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்

    மேலைச்சிவபுரியில் புலவர் நா.மு.மாணிக்கம் – அலர்மேலு இணையருக்கு 02.01.1953இல் பிறந்தார். இயற்பெயர் தமிழரசன். ஈரோட்டில் தொடக்கக் கல்வி யையும், நெய்வேலி, சிதம்பரத் தில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார். கல்லூரி மாணவ ராக இருந்தபோது காரைக்குடி அ.வீர.மு.வீர.பழனியப்பன் செட்டியார் – மீனாட்சி ஆச்சி இணையரின் வளர்ப்பு மகன் ஆனார். இதனால் பழ.முத்து வீரப்பன் எனப் பெயர் சூட்டப் பெற்றார். கொத்தமங்கலம் சி.அண்ணா மலைச் செட்டியார்- அண. திலகவதி இணையரின் மகள் உமையாள் இவரது வாழ்க்கைத் துணையானார். இவர்களுக்கு நன்முல்லை…

  • பேராசிரியர் அ.ஆலிஸ்

    தேனி, உசிலம்பட்டி சின்னக் கட்டளை கிராமத்தில் வசிக்கும் அருணாச்சல நாடார் – குருவுத் தாயம்மாள் தம்பதியருக்கு 05.02.1953 அன்று பிறந்தார். இயற்பெயர் அல்லி. குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் ‘ஆலிஸ்’ ஆனார். சிவகாசி ஸ்டாண்டர்டு ஃபயர் வொர்க்ஸ் கல்லூரியில் தமிழ் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார். இதே கால கட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனை வகுப்பில் பயின்று சான்றிதழ் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தில் 1977-இல் முதுகலைப் (எம்.ஏ.) பட்டமும், 1979இல்…

  • முனைவர் ஸ்ரீகுமார்

    பழைய திருவிதாங்கூர் தலைநகரான இரணியல் நகரில் சிவ ராமகிருஷ்ண பாகவதர் -சரோஜாதம்பதியருக்கு 8.5.1953 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியை நெய்யூர் எல்.எம்.ஏரியா பள்ளியிலும், எஸ்.எஸ்.எல்.சி வரை இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். இக்கால கட்டத்தில் இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. நண்பர்களுடன் இணைந்து ‘இலக்கிய கலாச்சாரக் கழகம்’ தொடங்கினார். 1968-ல் ஸ்காட் கிறித்துவக் கல்லூரியில் தாவரவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரியில் ‘வங்க தேசம் அலறுகிறது’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டி யில் முதல் பரிசு…

  • பேராசிரியர் இரா.பிரேமா

    தேனி பெரியகுளம் ராஜரத்தினம் -ராஜம்மாள் இணையருக்கு 15.03.1954 அன்று பிறந்தார். பெரியகுளத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரிக் கல்வியை மதுரை ‘டோக் பெரு மாட்டி கல்லூரி’யில் தொடங்கினார். இங்கு புகுமுக வகுப்பும், இளங்கலை, முதுகலை பட்டங்களும் பெற்றார். முதுகலையில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றார். கல்லூரி’யின் சிறந்த மாணவிக்கான தங்கப் பதக்கத்தையும் பெற்றார். அதன்பின், முனைவர் ஆய்வுக்காக மதுரை பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார், பேரா. முத்துச் சண்முகனார் வழிகாட்டுதலில் அவருடன்…

  • பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி

    தஞ்சை கும்பகோணம் அம்மா சத்திரத்தில் அ.மகாலிங்கம் படையாட்சியார் – அஞ்சலை தம்பதியருக்கு 21.4.1954 அன்று பிறந்தார். அம்மாசத்திரம் ஆரம்பப் பள்ளியிலும், தேப்பெருமாள் நல்லூர் நடுநிலைப் பள்ளியிலும், குடந்தை சிறியமலர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் இயற்கை அறிவியலில் புகுமுகக் கல்வியும், தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். இரண்டிலும் கல்லூரியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் முனைவர் பொற்கோ தலைமையில் ‘தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு’…

  • பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்

    விழுப்புரம் கள்ளக்குறிச்சி தியாகதுருக்கத்தில் ப.அரங்கநாதன் – பழனி யம்மாள் தம்பதியருக்கு 22.5. 1954-இல் பிறந்தார். தந்தை மைய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதுகளைப் பெற்ற தமிழாசிரியர். கடலூர் அரசினர் கலைக் கல்லூரியில் 1970-இல் பி.யூ.சி. படித்தார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1974-இல் இளங்கலை தமிழ் (பி.ஏ.) பட்டத்தையும், 1976-இல் முதுகலை தமிழ் (எம்.ஏ.) பட்டத் தையும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேரா.சி. பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் ‘பாரதி தாசனின் படைப்புகளில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஆய்வு மேற் கொண்டு…

  • வ.ஞானப்பிரகாசனார்

    கடலூர் கருங்குழி இ.வடிவேலர் – மயிலம்மை தம்பதியருக்கு 21.8.1951 அன்று பிறந்தார். புரூகீசுபேட்டையில் தொடக்க கல்வியையும், திருப்பாதிரிப்புலியூரில் உயர்நிலை கல்வியையும் பயின்றார். 1969-இல் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் புதுமுக வகுப்பினை முடித்து, 1973-இல் மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். 1975-இல் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். மாணவப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வம் கொண்டவராகவும் படைப்பாற்றல் கொண்டவராகவும் இருந்தார். இவர்தம் ஆசிரியப் பணியை தாம் படித்த பள்ளியிலேயே தொடங்கினார்….