பொ.வேல்சாமி
விருதுநகர் பாலவ நத்தம் கிராமத்தில் பொம்மைய்யா நாயக்கர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு 1951-இல் பிறந்தார். அப்பா, தஞ்சாவூரில் ஒரு முட்டைக் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை செய்து கொண்டிருந்ததால் 1958-இல் குடும்பத்தை தஞ்சாவூருக்கே அழைத்துக் கொண்டார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், அப்புத்தகங்களின் மூலமாக மன்னர்கள் முதல் சாமான்யர் வரையிலான வாழ்க்கைச் சூழலை அறிந்துகொண்டார். பூண்டி கல்லூரியில் பி.யூ.சி. புதுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ‘குஜிலி மார்க்கெட்’டில்…
