அறிஞர்

  • பொ.வேல்சாமி

    விருதுநகர் பாலவ நத்தம் கிராமத்தில் பொம்மைய்யா நாயக்கர் – பாப்பம்மாள் தம்பதியருக்கு 1951-இல் பிறந்தார். அப்பா, தஞ்சாவூரில் ஒரு முட்டைக் கம்பெனியில் கணக்கு எழுதும் வேலை செய்து கொண்டிருந்ததால் 1958-இல் குடும்பத்தை தஞ்சாவூருக்கே அழைத்துக் கொண்டார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பொது நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர், அப்புத்தகங்களின் மூலமாக மன்னர்கள் முதல் சாமான்யர் வரையிலான வாழ்க்கைச் சூழலை அறிந்துகொண்டார். பூண்டி கல்லூரியில் பி.யூ.சி. புதுமுகத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ‘குஜிலி மார்க்கெட்’டில்…

  • முனைவர் மு.தங்கராசு

    சேலம் சலகண்டபுரத்தில் தா.முத்து – பாப்பாயம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். பரமத்தி வேலூர், கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார். இவருக்கான கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் கல்லூரி முதல்வர் பொ.சண்முகசுந்தரம் செலுத்தி உதவினார். அது மட்டுமல்ல, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) படிப்பதற்கும் உதவினார். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அன்புக்குரியவர் ஆனார். எம்.ஏ.வில் முதல் தர மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். அதே கல்லூரியில் பேராசிரியராக்கினார் (1971). 1979-இல் பேரா. அ.மு.ப.வின்…

  • பேராசிரியர் ஞா.ஸ்டீபன்

    நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் கன்னியாகுமரி விளவன்கோடு கருங்கல்லில் பிறந்தார். தந்தை: சா.ஞானசெல்வமணி, தாயார்: சு.சொர்ணத்தங்கம். மார்த்தாண்டம் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் (தமிழ்) பட்டம், பாளையங் கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் முதுகலைப் (தமிழ்) பட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்றார். சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராக 1985-இல் வேலையில் சேர்ந்தார். 1992-இல் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வு மையத்தில்…

  • பேராசிரியர் சா.கிருட்டிணமூர்த்தி

    சிதம்பரம் வளையமாதேவியில் மு.சாமிநாதன்-சானகி அம்மாள் தம்பதியருக்கு 31.03.1951 அன்று பிறந்தார். தனது பெரியம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார். இவர் 3-ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தை காலமானார். தாய்மாமன் வீட்டில் தங்கிப் படித்தார். 1969-72 இல் விருத்தாசலம் கொளஞ்சியர் அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, வேலை கிடைக்காததால் தையல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தினார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1976-78இல் எம்.ஓ.எல் படித்து பட்டம் பெற்றார். ‘இளம் பூரணாரின் பொருளதிகார உரை’ என்ற தலைப்பில்…

  • நெல்லை சு.முத்து

    திருநெல்வேலி எம்.சுப்பிரமணிய பிள்ளை -எம்.சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 10.5.1951-இல் பிறந்தார். தந்தையாருக்கு கோவையில் வசித்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுடன் நட்புறவு இருந்தது. திருநெல்வேலியில் பள்ளிக்கல்வியையும், பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் புகுமுக கல்வியையும் பயின்றார். 1973இல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர், வேதியியல் பாடத்தில் பல்கலைக் கழகத்திலேயே இரண்டாவது இடத்தில் தேர்ச்சியடைந்தார். 1973இல் தனது 22ஆவது வயதில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலையில் சேர்ந்தார். 19.4.1976 அன்று இவருக்கும் தேனி மாவட்டம் கண்டமனூர்…

  • முனைவர் எச்.சித்திரபுத்திரன்

    கன்னியாகுமரி தாமரைக்குளம் ஹரிகர சுப்பிரமணிய பிள்ளை – விசாலம் தம்பதியருக்கு 19.05. 1951 அன்று பிறந்தார். 2-ஆம் வயதிலேயே அன்னையை இழந்து, தாய் வழித் தாத்தாவின் அரவணைப்பில் பறக்கையில் வளர்க்கப்பட்டார். பறக்கை, நாகர்கோயில் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்தபின், தென் திருவிதாங்கூரிலுள்ள இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும், வேதியியலில் இளம் அறிவியல் பட்டத்தையும் பெற்று, திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உராய்வு மையத்தில் முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் செ.வை.சண்முகம்…

  • பேராசிரியர் தொ.பரமசிவம்

    திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தொப்பதாஸ் – லட்சுமி தம்பதியருக்கு 04.03.1950 அன்று பிறந்தார். 1971-இல்காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) பயின்றார். 1976-இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல், சமஸ்கிருதம் இரண்டிலும் சான்றிதழ் பெற்றார். ‘அழகர் கோயில்’ பற்றி களஆய்வு செய்து 1981-இல் முனைவர் பட்டம் பெற்றார். 1971-இல் இளையான்குடி கல்லூரியில் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். மதுரை தியாகராசர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றி 2007-இல் விருப்ப ஓய்வு பெற்றார்….

  • பேராசிரியர் இளசை சுந்தரம்

    மகாகவி பிறந்த எட்டையபுரத்தில் பிறந்தவர். பெற்றோர்: அ.சீனிவாசன்- சீ.சீனியம்மாள். மனைவி: ரேவதி. தூத்துக்குடி சுப்பையா வித்தியாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ., பி.எட்., பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும் பெற்று, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘வானொலி வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1972-இல் எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியை ஏற்றார். 1976-இல் சென்னை அகில இந்திய வானொலியின் கல்வி…

  • பேராசிரியர் ராஜ்கௌதமன்

    விருதுநகர் திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு புதுப்பட்டி ரோமன் கத்தோலிக்க வடக்குத் தெரு, ராக்கம்மா பாட்டியின் குடிசையில், சூசைராஜ் – செவந்தி தம்பதியருக்கு பிறந்தார். கிறித்தவராகப் பிறந்த இவர், இந்துவாக மதம் மாறியபோது ‘எஸ்.கௌதமன்’ என வைத்துக் கொண்டார். ராஜ்கௌதமன் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். இவரது தங்கை எழுத்தாளர் பாமா. பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் விலங்கியல் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1969-ல் பாளையங் கேட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் தற்காலிக…

  • முனைவர் சு.திருநாவுக்கரசு

    விழுப்புரம் எண்ணாயிரம் உ.சுப்பராய பிள்ளை -காமாட்சி தம்பதியருக்கு 29.08.1950 அன்று பிறந்தார். எண்ணாயிரம் அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மயிலம்மை முருகன் கோயில் திருவிழாவில் சொற்பொழிவாற்றிய திருமுருக கிருபானந்த வாரியாரின் கேள்விக்குச் சரியான பதிலளித்து “அந்தத் திருநாவுக்கரசு போல நீ வர வேண்டும். இனி இந்த முருகனே உன் வழிபடு கடவுள், இதோ உள்ள சிவஞான பாலயசுவாமிகளே உன் குரு; தமிழே உனக்கு…