பேராசிரியர் கி.நாச்சிமுத்து
கோவை கொடுவாய் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிருஷ்ணசாமி – நாகம்மாள் தம்பதியருக்கு 24.08.1947 அன்று பிறந்தார். நான்காம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்று, பொங்கலூரிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்தார். கோவை பூ.சு.கோ. கலைக்கல்லூரியில் புகமுக வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1975-இல் கிருஷ்ணவேணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் களுக்கு கன்னியா, நித்தியா என இரு மகள்கள். மொழியியல்…
