பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
கோவையிலுள்ள வெள்ளலூரில் த. இளையபெருமாள் -பழனியம்மாள் தம்பதியரின் இளைய மகனாக 05.02.1942 அன்று பிறந்தார். வெள்ளலூர், கோவை இராமநாதபுரம் பள்ளிகளில் கல்வியைக் கற்று, 1957-இல் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்து வான், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். 1959- இல் சிங்காநல்லூரில் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து 2001-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆனார். தஞ்சைத்…
