அறிஞர்

  • தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன்

    சிவகங்கை வேம்பத்தூரில் அ.முத்தையா பிள்ளை- மீனாட்சியம் மாள் தம்பதியருக்கு 28.09.1934 அன்று பிறந்தார். இவருடைய தந்தை பர்மாவில் உள்ள மியான்மர் நகரில் வசித்த தனால் இவரும் 6-ம் அகவையிலேயே அங்கு சென்றார். அங்கு இவரால் பள்ளிக் கூடம் சென்று படிக்க முடியவில்லை என்றாலும், நகரத்தார் விடுதி நூலகத்தில் பாதுகாத்து வைக் கப்பட் டிருந்த நூல்களைப் படித்து கல்வியறிவு பெற்றார். இவரது பெரியப்பா நேதாஜி யின் ‘இந்திய தேசிய இரா ணுவ’த்தில் பணியாற்றியதால் இவரும் ‘பாலசேனா’ எனும் இளைஞர்…

  • பேராசிரியர் சே.இராமானுஜம்

    திருநெல்வேலி நாங்குனேரியில் சேஷன் – ரங்கநாயகி தம்பதியருக்கு 1935-இல் பிறந்தார். தந்தையார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றியதினால் பள்ளிக் கல்வியை திரு விதாங்கூரிலும் மதுரையிலும் பயின்றார். ஐந்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் கட்டயாயமாகப் படிக்க வேண்டிய சூழல். அந்தச் சூழலே மலையாள அறிவிற்கு வித்திட்டதுடன், மனதில் புரட்சிகர கருத்துகள் தோன்றவும் காரணமாக அமைந்தது. காந்தி கிராமத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றார். தேர்வு முடிவு வருமுன்பே மு.அருணாசல முதலியார் கேரளத்தில் இவருக்கு பணி வாய்ப்பை வழங்கினார்….

  • வா.மு.சேதுராமன்

    இராமநாதபுரம் முதுகுளத்தூர் ஆண்டநாயகபுரத்தில் இராமாயி — முத்து இணையர்க்கு 03.02.1935 அன்று பிறந்தார். உயர்நிலைப் பள்ளிப்படிப்புக்குப் பின், 1955-இல் காமராசர் ஆட்சிக் காலத்தில் கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்ட ஓராசிரியர் பணியில் இடிவிலகி கிராமத்தில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். 1958-60 இல் இடைநிலை ஆசிரியப் பயிற்சி முடித்து ஆசிரியப் பணியில் தொடர்ந்தார். 27.08.1958- இல் ஆசிரியை சேதுமதியை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். திருவள்ளுவர், கவியரசன், முத்துராமலிங்க ஆண்டவர், தமிழ்மணி கண்டன் என நான்கு மகன்கள், பூங்கொடி என்றொரு மகள். சென்னைப்…

  • பேராசிரியர் இராம.இராமநாதன்

    திருச்சி, அரிமளத்தில், மு.பெ.இராமநாதன் -நாச்சியம்மை தம்பதியருக்கு 07.07.1933 அன்று பிறந்தார். மாணவப் பருவத்திலேயே பேச்சாற்றல் கொண்ட இவர், சென்னை இலயோலா கல்லூரி யில் இடைநிலை வகுப்பில் படிக்கும்போது, இலங்கை சென்று பேச்சுப் போட்டியில் வென்று ‘வெள்ளிக் கோப்பை’ யுடன் தமிழகம் திரும்பினார். அதற்காக சென்னை மயிலாப் பூரில் பாவேந்தர் பாரதிதாசன் தலைமையில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட் டது. இவ்விழாவில் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, அன்புப்பழம் நீ போன்றவர்கள் பங்கேற்றுப் பாராட்டினர். பாவேந்தர்…

  • பேராசிரியர் .கு.சிவஞானம்

    தஞ்சை ஒரத்த நாடு காசளநாட்டு நடுவூரில் குருசாமி கீருடையார் – சின்னப்பிள்ளை தம்பதிக்கு 14.07.1933-இல் பிறந்தார். கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ், பட்டம் பெற்றார். எம்.லிட்., பட்டத்திற்காக தெ. பொ.மீ.யின் நெறியாள்கையில் ‘கம்பராமாயணத்தில் உவமைகள்’ என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ஆய்வு முடிவு பெறவில்லை. மொழியியலில் சான்றிதழ் பெற்றார். இவரது துணைவியர் பக்கிரியம்மாள். இவர்களுக்கு திருமாவளவன் என்றொரு மகன், கலைமகள், திருமகள் என இரு மகள்கள்….

  • முனைவர் தணிகை உலகநாதன்

    திருத்தணிகை வங்கனூர் கிராமத்தில் நெசவாளர் குடும்பத்தில், செவ்வண்ண தேசப்பர் – வள்ளியம்மை தம்பதியருக்கு 02.11.1933 அன்று பிறந்தார். 1951-இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தார். முதலாமாண்டு விடுமுறையில் உறவுப்பெண் வேலம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் இரண்டாவது மகப்பேறின்போது உயிர் துறந்தார். பிறகு வேலம்மாளின் தங்கை ஈஸ்வரியைத் தன் ‘மகனுக்காக’ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ‘வரதராசன்’ என்றொரு மகன், இரண்டாவது மனைவிக்கு ‘செந்தாமரை’ என்றொரு மகள், ‘செழியன்’ என்றொரு மகன். கே.ஜி.கண்டிகையை…

  • பேராசிரியர் இலெனின் தங்கப்பா

    திருநெல்வேலி தென்காசி குறும் பலாப்பேரில் புலவர் ஆ.மதனபாண்டியன் -இரத்னமணி தம்பதியருக்கு 08.03.1934 அன்று பிறந்தார். 5-வது வயதிலேயே பழந்தமிழ் நூல்களை தனது தந்தையினால் புகட்டப் பெற்றார். 1950-இல் தூய யோவான் கல்லூரியில் இடைநிலை வகுப்பையும், 1952-இல் சென்னை பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டத்தையும் பெற்றார். இடைநிலை பொதுத் தேர்வில் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப் பெண் பெற்ற இவர், 1954-இல் இளங்கலைப் பல்கலைக் கழகப் பொதுத் தேர்வில் தமிழில் பல்கலைக் கழகத்திலேயே…

  • பேராசிரியர் செ.வை.சண்முகம்

    அரியலூர் சோழபுரம் சங்குந்தபுரத்தில் வே.வைத்தியலிங்கம்- அமிர்தம்மாள் தம்பதியருக்கு 23.11.1932-இல் பிறந்தார். குடந்தை அரசினர் கல்லூரியில் இடைநிலை கல்வியும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு வகுப்பில் முதல் வகுப்பில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றார். 1959-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் வழி காட்டுதலில் ஆய்வு செய்து எம்.லிட் பட்டம் பெற்றார். 1967-இல் பேரா. அகத்தியலிங்கம் வழி காட்டுதலில் முனைவர் பட்டம் பெற்றார். 29.04.1959 அன்று சிதம்பரம் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேலாயுதன்…

  • வே.தி.செல்லம்

    குமரி மாவட்டம், இளை யான்விளையில் வேலாயுதப் பெருமாள்- பாக்கியமுத்து இணையருக்கு 23.11.1929 -இல் பிறந்தார். 1950-இல் பாளையங் கோட்டை தூய சவேரியர் கல் லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்று, வருவாய் ஆய்வாளராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1958-இல் திருமணம் நடை பெற்றது. துணைவி: இலட்சுமி தங்கம். 3 மகள்கள், 1 மகன். 1958-இல் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆரல் வாய்மொழி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1960-இல் புதுக் கோட்டை ஆசிரியர்…

  • இரணியல் கலைத்தோழன்

    குமரி இரணியல் மாங்குழியில் சா.ஆசீர்வாதம் -சாராள் தம்பதியருக்கு 03.01. 1930-இல் பிறந்தார். இயற்பெயர் சாமுவேல். இரணியல் உயர் நிலைப் பள்ளியில் படிக்கையில் நாடகம், இசை ஆகியவற்றில் இவரது ஈடுபாட்டை அறிந்த ஆசிரியர் கணபதி, “நீ கலைக்குத் தோழன்டா” என்று பாராட்டினார். அன்றிலிருந்து ‘இரணியல் கலைத்தோழன்’ எனப் புனைப் பெயர் வைத்துக்கொண்டார். 1965-இல் தாழக்குடி கிரேஸ் சுந்தரிபாய்-ஐ மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்கள், நான்கு மகன்கள். 1955-இல் குறும்பனை புனித இன்னாசியார் நடுநிலைப் பள்ளி யில் ஆசிரியர் பணியில்…