அறிஞர்

  • முனைவர் இரா.பழனிசாமி

    இராசிபுரம் தெப்பம்பட்டியில் இராமலிங்கையா- பெத்தக்காள் தம்பதியருக்கு 15.07.1935 அன்று பிறந்தார். இராசிபுரம் திருவேங்கடவிலாஸ் எலிமெண்டரி பாட சாலையில் பதினொரு வயது வரை பள்ளி சென்றதுடன் தமிழ் மொழியைத் தனியாகக் கற்றுத் தேர்ந்தார். இவரது உறவினரான எஸ்.எஸ். இராஜேந்திரன் வழிகாட்டுதலில் சேலத்தில் உள்ள நாடகக் குழுவினர் நடத்தும் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்தார். 14-ஆம் அகவையில் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங் கினார். 1949-53 இல் ‘தேவி நாடகக் குழு’வில் இயங்கினார். 19-ஆவது வயதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நாடகக்குழுவில்…

  • பேராசிரியர் நல்லூர் சா.சரவணன்

    இடைகழிநாட்டு நல்லூரில் பெ.சாரங்கபாணி -நீலாவதி தம்பதியருக்குப் பிறந்து, பள்ளிப் படிப்பைத் தம் சொந்த மண்ணில் தொடங்கி, தொடர்ந்து கடப்பாக்கம் ஸ்ரீ பெ.கிருஷ்ணா ரெட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வியை முடித்து, மயிலம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்து,சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத் துறையில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். கூடுதலாக தமிழ் முதுகலையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முடித்து, பண்டைத் தமிழ் ஆய்வில் கோவைப் பாரதியார் பல்கலைக் கழகத்…

  • பேராசிரியர் அ.அ.மணவாளன்

    தென்னாற்காடு அரும்பராம்பட்டு கிராமத்தில் ரா. அப்பாவு – ஆதிலெட்சுமி தம்பதியருக்கு 06.09.1935-இல் பிறந்தார். பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் ‘தமிழ் வித்வான்’, கோவை இந்தி பிரசார சபாவில் இளங்கலைக்கு நிகரான ‘விஷாரத்’, சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல் வழியில் ஆங்கிலத்தில் இளங்கலை, திருச்சி ஜமால் கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலை (1967) ஆகிய பட்டங்களையும், ஹைதராபாத் ஆங்கிலம் மற்றும் மேலைநாட்டு மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தில் ஆங்கில மொழி கற்பித்தலில் முதுகலைப் பட்டயம் (1978), சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் ஆய்வு…

  • பேராசிரியர் சு.சிவகாமசுந்தரி

    தஞ்சை திருவையாறு ப.தர்மாம்பாள் – பழனிவேல் தம்பதியருக்கு 13.01.1936 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை தஞ்சை கிறித்தவப் பள்ளியிலும், புகுமுக வகுப்பை திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியிலும், மேற் படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பேராசிரியர், தமிழ்த் துறைத் தலைவராகவும், அவினாசி லிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்….

  • புலவர் வே.பதுமனார்

    திருப்பத்தூரில், நெசவுத் தொழிலைக் குடும்பத் தொழிலாகக் கொண்ட சாமி வேலாயுதம் – இராசம்மாள் தம்பதியர், பஞ்சம் பிழைக்க பெங்க ளூர்க்குக் குடிபெயர்ந்தனர். அங்கு 02.04.1936 அன்று வே.பதுமனார் பிறந்தார். பள்ளிப் படிப்பை பெங்களூர் செட்டிப்பாளையத்திலும், (தமிழகம் திரும்பி குடியேற்றம் எனும் அம்மா பிறந்த ஊரில் குடியேறிய பிறகு) நல்லூர் பேட்டையிலும் முடித்தார். வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார். குடும்ப வறுமை காரணமாக ஒரு சாயப் பொருள் விற்பனைக் குழுமத்தில் எழுத்தராக அறுபது ரூபாய் மாதச்…

  • பேராசிரியர் தி.சு.நடராசன்

    விருதுநகர் திருத்தங்கல் சு.குருவம்மாள் – பெ.சுப்பையா நாடார் தம்பதியருக்கு 15.06. 1936 அன்று பிறந்தார். இவர் பிறந்த இரு வருடங்களில் தாயார் இறந்தார். நான்கு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். எளிய விவசாய குடும்பம். திருத்தங்கல், மாவட்ட கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் பயின்றார். தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் (1965) பெற்றார். 1966-இல் மதுரைப் பல்கலைக் கழகத்தின் ‘முதல் ஆராய்ச்சி மாணவன்’…

  • பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன்

    தென்காசி அய்யாபுரம் கிராமத்தில் மு.பிச்சைமுத்து – கனியம்மாள் தம்பதியருக்கு 16.05.1939 அன்று பிறந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் 1959-இல் பொருளாதாரத்தில் இளங் கலை பட்டமும், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 1961-இல் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1961 சூனில் ‘இன்பவல்லி’ அவர்களை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு முத்துச்செல்வி, கலையரசி, முத்தமிழ்ச்செல்வன், அன்புச்செழியன் என இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். 1961-இல் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுநராகப் பணியில் சேர்ந்தார். 1963-இல் விரிவுரையாளரானார். 1977-இல்…

  • பேராசிரியர் சுப.திண்ணப்பன்

    தேவகோட்டையில் பழ.தி.சுப்பிரமணியன் – ஆனந்தவல்லி ஆச்சி தம்பதியருக்கு 19.06.1935 அன்று பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தாயாரை இழந்தார். தந்தை வழி பாட்டி ஏகம்மை இவருக்கு தாயாய் இருந்து வளர்த்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி.யில் மாவட்டத்திலேயே தமிழில் முதல் மதிப்பெண் பெற்றார். 1959-இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பி.ஏ.படிக்கையில் (1959) இவருக்கும் உறவுப்பெண்ணான இந்திராளுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்; ஒரு மகள். 1959-இல் அதிராமபட்டினம் காதர் மொகைதீன் கல்லூரியில் தமிழ்…

  • கோவை ஞானி

    கோவையில் கிருஷ்ணசாமி – மாரியம்மாள் இணையருக்கு 01.07.1935-இல் பிறந்தார். இயற்பெயர் கி.பழனிச்சாமி. தந்தையார் பங்கீட்டுக் கடை நடத்தினார். கோவை அரசு கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல். முதல் தர மாணவராகத் தேர்ச்சி பெற்று அண்ணாமலைச் செட்டியாரின் நினைவுப் பரிசைப் பெற்றார். வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட நூலகத்தில் இருந்த நேரமே அதிகம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.எட். பட்டத்தையும் பெற்று, செங்கோட்டையார் நினைவு உயர் நிலைப் பள்ளியில்…

  • சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன்

    தில்லை ஸ்தானத்தில் நடராச ஐயர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு 18.8.1934 அன்று பிறந்தார். நெய்த்தானத்தில் தொடக்கக் கல்வியைக் கற்று, திருவையாற்றில் உயர்நிலைக் கல்வி கற்றார். திருச்சி தூயவளனார் கல்லூரியில் இண்டர்மீடியம் முடித்து, அங்கேயே வணிகவியலில் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். தஞ்சையில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பால சுப்பிரமணியன் மகள் கல்யாணி அம்மையாரை 13.09.1956-இல் மணந்தார். இத்தம்பதியருக்கு சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ் என நான்கு மகன்கள். தி.ந.இராமச்சந்திரன் தன் மாமனாரிடமே ஜூனியராகப்…