பொன்.சௌரிராசன்
நாகை சிக்கல் கிராமத்தில் நாராயண பொன்னையா -ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 06.04.1932 அன்று பிறந்தார். இவர் ஒன்றரை வயது குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தார். அதன்பின் தாயின் அன்பிலும் அரவ ணைப்பிலும், கூட்டுக் குடும்பச் சூழலிலும் வளர்ந்தார். நாகப்பட்டினம் தேசிய உயர் நிலைப் பள்ளியில் கல்வியை முடித்த இவர், சிதம்பரம் கீழ மூங்கிலடி காந்தி ஆசிரமத்தில் காந்திய ஆதாரக் கல்வி ஆசிரியப் பயிற்சியை 1953-இல் நிறைவு செய்தார். 1955-1960இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர் மு.வ. அவர்களின்…
