பேராசிரியர்

  • அ.ஆறுமுகனார்

    அரியலூர் சாத்தநத்தம் கிராமத்தில், வேளாண் குடும்பத்தில் அமிழ்தம் -அருணாச்சலம் இணையருக்கு 11.06.1933-இல் பிறந்தார். சாத்நத்தம், திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாசலம் ஆகிய ஊர்களிலுள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1951-இல் திருச்சியிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக வித்துவான், இளங்கலை, முதுகலை, முனை வர்ப் பட்டங்களைப் பெற்றார். 1953-இல் தாம் படித்த சாத்தநத்தம் உயர்நிலைப் பள்ளியிலேயே இடைநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1955-இல் கீழப்புலியூர், 1956-இல் கூடலூர், 1960-இல்…

  • ச.மெய்யப்பன்

    புதுக்கோட்டை திருமெய்யம் இராமச்சந்திரபுரத்தில் குங்கிலியம் பழ.சண்முகனார் -மீனாட்சி ஆச்சி தம்பதியருக்கு 21.06.1933 அன்று பிறந்தார். இயற்பெயர்: சத்தியமூர்த்தி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆனர்ஸ் படித்து, 1957-இல் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அதே பல்கலைக் கழகத்திலேயே ஆசிரியர் வேலை கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. 31.12.1957-இல் மெய்யப்பனாருக்கும் ஆத்தங்குடி ‘மீனாட்சிக்கும், மொழிஞாயிறு தேவநேயபாவாணர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மீனாட்சிசுந்தரம் என்றொரு மகனும், மீனாட்சி என்றொரு மகளும் உள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்…

  • க.கைலாசபதி

    1933 சித்திரை 5-ஆம் நாள் கோலாலம்பூரில் கைலாசபதி பிறந்தார். இவரது தந்தை கனகசபாபதி, அங்கு வடவரைஞராகப் பணிபுரிந்தார். கோலாலம்பூர், விக்டோரியா இன்ஸ்டிடிட்யூட்டில் ஆரம்பக் கல்வி பயின்ற கைலாசபதி, இரண்டாம் உலக யுத்த முடிவில் தாயார் தில்லைநாயகியுடன் தமது சொந்த ஊரான யாழ்ப்பாணம், இடைக்காடுக்கு வந்து சேர்ந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விடுதியில் தங்கி இடைநிலைக் கல்வி பயின்றார். கல்லூரி காலத்திலேயே ‘இந்து சாதனம்’, ‘தமிழ்மணி’, ‘சுரபி’ மற்றும் கல்லூரி இலக்கிய மன்ற இதழ்களிலும் சமயம், இலக்கியம் சார்ந்த…

  • கலைமாமணி சோ.சத்தியசீலன்

    பெரம்பலூர் சோம சுந்தரம் – மீனாம்பாள் தம்பதியருக்கு 14.04.1933 அன்று பிறந்தார். பி.ஏ., (பொருளியல்), பி.டி. (ஆங்கிலமும் சமூகவியலும்), எம்.ஏ. (தமிழ்), மெய்ப்பொருளியலில் ‘வள்ளலாரின் சமுதாய ஆன்மிகக் கொள்கைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். திருச்சிக்கு அருகிலுள்ள இருங்களூர் தூய தரங்கை ஆசிரியர் பயிற்சிப்பள்ளி, இலப்பைக்குடிகாடு மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளி என பத்து ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், திருச்சி தேசியக் கல்லூரியில் பத்து ஆண்டுகள் பேராசிரியராகவும், பத்து ஆண்டுகள் திருச்சி உருமு…

  • டாக்டர் சொ.சிங்காரவேலனார்

    மயிலாடுதுறை திருச்சிற்றம்பலத்தில் வசித்த சொக்கலிங்க தேசிகரின் மகனாவார். இவர் தருமபுரத்தில் முறையாகத் தமிழ்க் கற்று வித்துவான் பட்டத்தைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘மொழியியல் அணுகு முறையில் அப்பர் தேவாரம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆங்கிலத்தில் ஆய்வேட்டை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். தாம் பயின்ற தருமபுரம் ஆதீனத்தின் தமிழ்க் கல்லூரியிலேயே விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து, பணி உயர்வு பெற்று முதல்வராக 11 ஆண்டுகள் பணியாற்றினார். அ.வ.அ. கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச்…

  • குருவிக்கரம்பை சு.வேலு

    தஞ்சாவூர் பேராவூரணி ‘குருவிக்கரம்பை’யில் சுப்பையா தேவர்- சௌபாக்கியம் தம்பதியருக்கு 27.11.1930-ல் பிறந்தார். பரம்பரையாக நாட்டு மருத்துவத் தொழில் செய்யும் குடும்பம். 1947-இல் இராசாமடம் உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் போது அங்கு வரும் ‘விடுதலை’ நாளிதழைத் தொடர்ந்து படித்தார். அதில் ‘குத்தூசி’ குருசாமி கட்டுரைகள் எழுதினார். இதனால் பெரியார் மீதும், ‘திராவிடர் கழகம்’ மீதும் ஈர்ப்பு உண்டானது. வேலுவின் தாத்தா குமாரசாமித் தேவரும், ‘குத்தூசி’ குருசாமியின் தாத்தா சாமிநாத முதலியாரும் நெருங்கிய நண்பர்கள். குடும்ப உறுப்பினர்கள் போல. குருசாமியின்…

  • முனைவர் பூ.சுப்பிரமணியம்

    வடஆற்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், இரகுநாத சமுத்திரத்தில் அங்கம்மாள் -பூங்காவனம் இணையருக்கு 02.07.1927 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை இரகுநாத சமுத்திரத்திலும், சாத்தம்பாடியிலும் பயின்றார். பின்னர் 1946-இல் செங்கல்பட்டில் அமைந்திருந்த ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் ஆரம்ப ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1947 முதல் இரகுநாத சமுத் திரத்திற்கு அருகிலமைந்துள்ள ஊர்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியப் பணியை மேற் கொண்டார். பள்ளி இறுதித் தேர்வைத் தனி நிலையில் எழுதித் தேர்வு பெற்று, மயிலம் சிவஞான சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில்…

  • டாக்டர் மு.வரதராசன்

    இயற்பெயர் திருவேங்கடம். திருப்பத்தூர் வேலம் கிராமத்தில் முனிசாமி – அம்மாக்கண்ணு இணையருக்கு 25.4.1912 அன்று பிறந்தார். வேலம், வாலாசா, திருப்பத்தூர் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை முடித்து, 1928-இல் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி ஏற்றார். 1935-இல் தமிழ் வித்துவான் தேர்வைத் தனியாகப் படித்து மாநிலத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 1935-இல் மாமன் மகள் இராதா அம்மையாரை மணந்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகள். 1939-இல் பி.ஓ.எல். பட்டம் பெற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்…

  • Dr SOUNDARA MAHADEVAN

    டாக்டர் சௌந்தர மகாதேவன் தன்குறிப்பு திருநெல்வேலி, ரஹ்மத் நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர். சௌந்தர மகாதேவன், சிறுவயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பேச்சாளர், இணையத் தமிழ்ஆய்வாளர். தந்தையார் ம.சௌந்தரராஜன், தாயார் சௌ.பொன்னழகி ஆகியோரின் மகனாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் 10.4.1974 ஆமாண்டு பிறந்த ச.மகாதேவனுக்கு, ம.வெங்கடலட்சுமி என்கிற துணைவியாரும் ம.சௌந்தர்ராஜ், ம.பிரணவ் என்கிற மகன்களும் உள்ளனர். பெற்ற பரிசுகள் பாரதப்பிரதமர் விருது…

  • Prof.P.C.Rathinam

    எனது கிராமத்தின் முதல் பட்டதாரி;முதல் பேராசிரியர்!1971 முதல் 2004வரை கல்லூரி பேராசிரியர் பணி.ஓய்வுக்குப் பின்னர் தமிழ் மீதான பற்றின் காரணமாக திருமந்திரம், திருவாசகம், திருக்குறள்,பிற சமூக நலன் சார்ந்த நூல்கள் அடங்கிய 41 நூல்கள் எழுதியிருக்கிறேன்.2023இல் மலேசியாவில் நடைபெற்ற பதினோராவது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்தளித்திருக்கிறேன்!10க்கும் மேற்பட்ட விருதுகளையும்,பொற்கிழிகளையும் பெற்றிருக்கிறேன்.