எழுத்தாளர்

  • விந்தன்

    காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் வேதாசலம் – ஜானகியம்மாள் தம்பதியருக்கு 22.09.1916 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் கோவிந்தன். வறுமையான குடும்பச் சூழலினால் நடுநிலைப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல், இலவச இரவுப் பள்ளிக்குச் சென்று ஓரளவு கல்வியறிவு பெற்றார். பின்னர், ஓவியம் படிப்பதற்காக சென்னை ஓவியக் கல்லூரிக்குச் சென்றார். பாதியிலேயே ‘ஜெமினி ஸ்டுடியோ’வில் ஓவியரானார். ‘தமிழரசு’, ‘ஆனந்தபோதினி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய அச்ச கங்களில் அச்சுக் கோர்ப்பாளராக வேலை செய்தார். ஆனந்த விகடனில் வேலை செய்யும் போதுதான்…

  • நா.வானமாமலை

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் நாராயணன் -திருவேங்கடம் தம்பதியருக்கு 07.12.1917-இல் இவருடைய தந்தை கிராம முன்சிப். உயர்நிலைப் பள்ளி வரை யிலான கல்வியை நாங்குநேரியில் பயின்றார். திருநெல்வேலி இந்து கல்லூரியில் புகுமுக படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி யில்இளங்கலைப் படிப்பையும் முடித்தார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் (எல்.டி) பட்டம் பெற்றார். பின்னாளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிக் கல்வி காலத்தில் டால்ஸ்டாய், டிக்கன்ஸ், பிட்மன், ஹியூகோ போன்ற உலக இலக் கிய அறிஞர்களின் நூல்களை ஆழ்ந்து…

  • தேவன் (ஆர்.மகாதேவன்)

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் 8.9.1913 பிறந்தார். அருகிலுள்ள திருவாவடுதுறை ஆதின உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது பள்ளி சாரணர் படையில் சேர்ந்திருந் திருந்தார். சாரணப் படைத்தலைவராக இருந்த கோபால்சாமி, மாணவர்களுக்கு பல சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப் பார். அவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 21-ஆவது வயதில் ‘ஆனந்த…

  • உமாசந்திரன்

    ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டிணத்தில் பூர்ண கிருபேஸ்வர அய்யர்- உமா பார்வதி தம்பதியருக்கு 14.09. 1914 அன்று பிறந்தார். இயற் பெயர்: ராமசந்திரன். பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் விஸ்வ நாதன் ஆகியோர் இவருடைய சகோதரர்கள். இவர், தனது தாய் பெயரின் முன் பாதியையும், தன் பெயரின் பின் பாதியையும் சேர்த்து ‘உமாசந்திரன்’ என புனைப்பெயர் வைத்துக் கொண்டார். பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. இண்டர் மீடியட் படித்தவர். 1944-இல் கமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூர்ணிமா, பாரதி…

  • அழகியநாயகி அம்மாள்

    குமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழியில் 1914-இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முறையாக பள்ளிக் கூடத்தில் படித்தார். தன் முயற்சியில் தந்தையிடமிருந்து தமிழ் மருத்துவம், சோதிடம் ஆகியவற்றையும் கற்றார். இதே காலகட்டத்தில் மலையாள மொழியையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1939-இல் இவருக்கும் மணிக்கட்டிப் பொட்டலைச் சார்ந்த ஆசிரியர் சிவ பொன்னீலவடிவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின், கணவர் ஊரான மணிகட்டிப் பொட்டலில் வாழத் தொடங்கினார். பின்னர் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுக் கொண்டார். அழகிய நாயகி அம்மாளின்…

  • வை.மு. கோதைநாயகிஅம்மாள்

    சென்னை, திருவல்லிக்கேணியில் நீல.வெங்கடாச்சாரியார்- நீல.பட்டம்மாள் தம்பதியருக்கு 01.12.1901 அன்று பிறந்தார். தந்தை காவல்துறை அதிகாரி. கோதைநாயகிக்கு ஐந்தரை வயதில் திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் ஒன்பது வயது வை.மு.பார்த்தசாரதி ஐயங்கார். பன்னிரண்டு வயதிற்குள் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கோதைநாயகிக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் உள்ளத்தில் பொங்கும் உணர்வுகளை வாய்மொழி கதையாகச் சொல்லிக் கொண்டிருந்திருந்தார். அவர் வசிக்கும் அதே வீட்டில் வசித்த டி.சி.பார்த்தசாரதி ஐயங்காரின் மனைவி டி.சி.பட்டம்மாள் அவர் சொல்லும் கதையை எழுதிக் கொடுத்தார். பிறகு தொடக்க…

  • ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்

    டி.கே.சி. 18.08.1881-இல் பிறந்தார். தந்தை தீத்தாரப்ப முதலியார், தாயார் மீனம்மாள். ஸ்ரீவில்லிபுத்தூர் தாய்வழிப் பாட்டனார் வீட்டில் பிறந்தார். தென்காசியில் வசதியாக குடும்பம். திண்ணைப் பள்ளி, தென் காசி நடுநிலைப் பள்ளி, திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1900-08இல் சென் னை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1908-இல் தாய்மாமன் புதல்வி ‘பிச்சம்மாள் அண்ணி’யை வாழ்க்கைத் துணையாக ஏற் றார். 1908-இல் சென்னையில் ஒரு வாடகை வீட்டில், மனை வியுடன் இல்லறம் நடத்திக்…

  • பேரா.பி.ஸ்ரீ.ஆச்சார்யா

    திருநெல்வேலி மாவட்டம், தென்திருப்பேரை கிராமம், ‘சித்திரக்கவி’ பிச்சு ஐயங்கார் -பிச்சு அம்மாள் தம்பதியருக்கு 16.4.1886 அன்று பிறந்தார். இயற்பெயர் ஸ்ரீநிவாசன். நெல்லையிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். அப்போது கல்லூரி முதல்வர் விங்ளர் துரைக்கும், ஹெர்பர்ட் சாம்பியன் துரைக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் ஆனார். எப்போதும் புத்தகமும் கையுமாக இருந்ததாலும், விடு தலைப் பேராட்டத்தில் கவனம் திரும்பியதால் இன்டர்மீடியட் படிப்பு பாதியிலேயே நின்றது. என்றாலும், இவரது ஆங்கிலப் புலமையை வியந்த அவரது…

  • வடுவூர் கே.துரைசாமிஐயங்கார்

    துரைசாமி ஐயங்கார், தஞ்சை மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வடுவூர் கிராமத்தில் 12.12.1880அன்று பிறந்தார். தந்தையார் கிருஷ்ண ஐயங்கார். 1891-இல் திருமணம் நடைபெற்றது. மனைவி நாமகிரி அம்மாள். இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். வடுவூராரின் புகைப் படம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், “சேலம் பட்டுக்கரை வேட்டியும், காதில் டால் வீசும் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீ சூர்ணக்கோடு மாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை என் னால் இன்று கூட நினைவு கூர முடிகிறது”…

  • ஆனந்தரங்கப்பிள்ளை

    இன்றைய சென்னையின் ஒரு பகுதியான பெரம்பூரில் திருவேங்கடப்பள்ளை என்பவரின் மகனாக ஆனந்தரங்கப் பிள்ளை பிறந்தார். பின்னர் இவரது தந்தை தனது மைத்துனர் நைனியாப் பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க குடும்பத்துடன் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தார். ஆனந்தரங்கர் தனது 18-ஆம் வயதில் பிரெஞ்சு ஆளுநர் லெனுவாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவரது நம்பிக்கைக்குரியவர் ஆனார். 03.07.1744-இல் ஆனந்தரங்கர் பல்லக்கில் செல்லவும், விளக்குகளை ஏந்திச் செல்லும் சேவகர் களை வைத்துக் கொள்ளவும் துய்ப்ளேவினால் அனுமதிக்கப் பட்டார். இவரை தலைமை துவிபாசாக 1749-இன் தொடக்கத்தில்…