கோவி.மணிசேகரன்
வேலூர் கோவிந்தன் – பட்டம்மாள் தம்பதியருக்கு 02.05.1927 அன்று பிறந்தார். சிந்தாதிரிப்பேட்டை நகராண்மைக் கழகப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு வரை படித்தார். பிறகு சகோதரியுடன் புதுச்சேரியிலுள்ள பாக்கஉடையான் பட்டு கிராமத்திற்குச் சென்று அங்கே தமிழ் பயின்றார். இசையில் நாட்டங்கொண்டு 1947-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசை பயின்றார். இசைமாமன்னர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடம் குருகுலவாசம் இருந்து தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். மகாவித்வான் வெள்ளை வாரணர், அ.சிதம்பரநாதன் செட்டியார் போன்றோரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். ‘கலை மன்றம்’, ‘கலை…
