எழுத்தாளர்

  • தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதஐயர்

    கும்பகோணம் அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் வேங்கட சுப்பையர் மகனாக 19.02.1855 அன்று பிறந்தார். இயற்பெயர் வேங்கடராம சர்மன். இளம் பருவத்தில் பாட்டனாரிடம் இவர் அரிச் சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களைக் கற்றார். காருகுடி கஸ்தூரி ஐயங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை, செங்கணம் விருத்தாசல ரெட்டியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவர்கள் அளித்த பயிற்சியினால் இளம் வயதி லேயே செய்யுள் இயற்றும் சிறப்பினைப் பெற்றார். 1880-இல் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பணி நிறைவு பெற்ற தியாகராச செட்டியார்…

  • மாயூரம் வேதநாயகம் பிள்ளை

    திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில், சவரிமுத்துப் பிள்ளை – ஆரோக்கிய மாரியம்மாள் தம்பதியருக்கு 1826இல் பிறந்தார். 11-ஆவது வயது வரையில் குளத்தூரிலேயே தந்தையிடமே தமிழ்க் கல்வியைக் கற்றார். திருச்சி நீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளர் தியாகப்பிள்ளையிடம் ஆங்கிலம் கற்றார். இவர் கல்வி கற்கும் காலத்தில், தனது அன்பிற்குரிய அடைக்கலம் பிள்ளையைப் பற்றி எழுதிய செய்யுளே முதல் படைப்பு எனப்படுகிறது. 22-வது வயதில், திருசிரபுரம் நீதிமன்றத்தின் தலைவரான கார்டன் என்ற ஆங்கிலேயர் இவரது திறமையை அறிந்து ‘ரிகார்டு கீப்பர்’ வேலையில் அமர்த்தினார்….

  • Ma.KAMUTHURAI

    ம. காமுத்துரை பிறந்தநாள் : 16.09.1960 பெ ற்ற ோர் : சா. மணியபிள்ளை – பழனியம்மாள் உடன்பிறந்த ோர்; சக ோதரர் நால்வர், சக ோதரி ஒருவர் படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி , ஐ. டி. ஐ..வெ ல்டர் பணிபுரிந்த அனுபவம் : தபால் ஆபசீ ில் தபால் சே க்ரிக்கும் மெ சஞ்சர், மருந்துக்கடை சிப்பந்தி, பாட்டா செ ருப்புக்கடை சிப்பந்தி, ஒர்க்சாப்பில் உதவிஆள், ஸ்பின்னிங் மில்த ொழிலாளி, ர ொட்டி வியாபாரம், பை…

  • Pattazhagan

    முனைவர் மோ.பாட்டழகன்.பதிப்பாளர் வசந்தா பதிப்பகம்.ஆசிரியர் வெற்றி முனை மாத இதழ்.பொறுப்பாசிரியர் பாசறை முரசு.இயக்குனர் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.வசந்தாபதிப்பகத்தின் வாயிலாக கடந்த 57 ஆண்டுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வாயிலாக 12 தேசியக் கருத்தரங்குகள் 143 பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தி 8740 ஆய்வாளர்களின் ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டுள்ளேன்.இலங்கை.மலேசியா.துபாய்.இலண்டன் ஆகிய நாடுகளிலும் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன்.சிறந்த பதிப்பாளர் விருதும் சிறந்த ஆய்வாளர் விருதும் தமிழக அரசு…

  • Dr SOUNDARA MAHADEVAN

    டாக்டர் சௌந்தர மகாதேவன் தன்குறிப்பு திருநெல்வேலி, ரஹ்மத் நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர். சௌந்தர மகாதேவன், சிறுவயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பேச்சாளர், இணையத் தமிழ்ஆய்வாளர். தந்தையார் ம.சௌந்தரராஜன், தாயார் சௌ.பொன்னழகி ஆகியோரின் மகனாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் 10.4.1974 ஆமாண்டு பிறந்த ச.மகாதேவனுக்கு, ம.வெங்கடலட்சுமி என்கிற துணைவியாரும் ம.சௌந்தர்ராஜ், ம.பிரணவ் என்கிற மகன்களும் உள்ளனர். பெற்ற பரிசுகள் பாரதப்பிரதமர் விருது…

  • Arun Mo

    அருண் மோ (Arun Mo) எழுத்தாளர், திரைப்படத் திறனாய்வாளர் மற்றும் மாற்று சினிமாவுக்கான களப்பணியாளர் ஆவார். பத்திரிகை மற்றும் மின் ஊடகத்துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கருப்பு எனும் மின் ஊடகம் மூலம் பல்வேறு சீரிய மாற்றங்களை சமூகத்தில் நிகழ்த்தியவர். அச்சில் வெளியாகும் மாத இதழான படச்சுருள் இந்தியாவிலேயே குறிப்பிட்ட கருப்பொருளில் வெளியாகும் சினிமா சார்ந்த ஒரே மாத இதழாக வெளியாகி வருகிறது. இந்த இதழ் தமிழ் சினிமா வரலாற்றில் சமூக சினிமா எனும் புதிய பாதத்தை…

  • Kanmani Rajamohamed

    பி.ராஜாமுகமது மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கம்பூர் கிராமத்தில் முகமது சுல்தான்,பாத்துமுத்து தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்தவர். மதுரை தீந்தமிழ் தியாகராசர் கலைக்கல்லூரியில் இளம் அறிவியல்- விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.முதன் முதலாக அக்கல்லூரியில் நடந்த கவிதைப்போட்டியில் முதல் பரிசு வென்றவர்.அப்துல் ரகுமான்,அப்துல் காதர்,மு.மேத்தா,அபி, மீரா,இன்குலாப் ஆகியோர் பயின்ற தமிழ்த்துறை தான் இவருக்கு கவிஞர் பட்டம் சூட்டியது. திரைப்படத்துறையில் கதை வசனகர்த்தா, இயக்குநர்.கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக பணியாற்றுபவர். துணை-இணை இயக்குநராக பணியாற்றிய படங்கள்…

  • Samaran nagan

    விவசாய கூலியின் மகன் ————————— வரலாற்றில் இருட்டடிப்புகளுக்கும், திரிபுகளுக்கும் உள்ளானவற்றை தேடுவதிலும் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதிலும் பேராவல் கொண்டவன். சாதி மத, மொழி இனம் கடந்து, தேச எல்லைகள் தாண்டி மானுடத்தை நேசிக்கின்ற, அதன் தொடக்கத்தை தேடுகின்ற ஒரு வரலாற்று ஆர்வலன். —————————————– அரசியல் களத்தில் பணி

  • M.Ganesan

    Dr.மோ.கணேசன்,M.A.,M.A.,Ph.D மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். பிறப்பும் இருப்பிடமும் சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி – வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கல்வி ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம்…

  • A.S. Mahendran

    கடந்த 35 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் கோலோச்சிக் கொண்டிருப்பவர். அறிவியல், தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் கற்க இயலாத காலகட்டத்தில், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் கணிப்பொறி குறித்தும் செல்பேசிகளின் தொழில்நுட்பங்கள் குறித்தும், அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் கம்ப்யூட்டர் உலகம் இன்டர்நெட் உலகம் மொபைல் உலகம் ஆகிய மாத இதழ்களை தொடர்ந்து 35 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருப்பவர். தமிழில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பக நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள…