எழுத்தாளர்

  • டி.செல்வராஜ்

    திருநெல்வேலி மாவடி கிராமத்தில், டேனியல்-ஞானம் தம்பதியருக்கு 14.1.1938 அன்று பிறந்தார். 1959-இல் திருநெல்வேலி இந்து கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பையும், 1962-இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து, சென்னையில் மூத்த வழக்கறிஞர் வி. வெங்கட்ராமனிடம் இளநிலை வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர், திண்டுக்கல் மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்கறிஞ ராகப் பணியாற்றினார். 1971-இல் இவருக்கு பெரியகுளம் வழிவிட்டான் பாரத புத்ரியுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். கல்லூரி நாட்களிலேயே தொ.மு.சி., தி.க.சி.,…

  • ரமணிசந்திரன்

    தூத்துக்குடி திருச்செந்தூர் மூலைப்பொழில் கிராமத்தில் கணேசன் – கமலசுந்தர தேவி தம்பதியர்க்கு 10.07.1938-இல் பிறந்தார். திருச்செந்தூரிலும், பாளையங்கோட்டையிலும் பள்ளிக் கல்வியை முடித்துள்ளார். பள்ளியில் படிக்கும்போதே 14.06. 1962-இல் திருச்செந்தூரில் பாலசந்திரனைத் திருமணம் செய்து கொண்டார். நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ நாவலின் தலைவன் (அரவிந்தன்), தலைவி (அகிலாண்டேஸ்வரி) பெயரை தங்கள் மகன், மகளுக்குச் சூட்டினர். திருமணத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. முடித்து, ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. பட்டமும் பெற்றார். ரமணி எனும் தன் பெயருடன் கணவர் பெயரின் பின் பாதியைச்…

  • ச.மதனகல்யாணி

    புதுவை முருங்கப்பாக்கம் கி.ராஜாம்பாள் – தளவா கிருஷ்ணசாமி தம்பதியருக்கு 1938-இல் பிறந்தார். தந்தை காவல் துறை ஆய்வாளர். தனது ஆரம்பக் கல்வியை (1949) தந்தையின் பணி மாற்றங்களினால் பல்வேறு ஊர்களில் படித்தார். இப்பள்ளிகளில் துணை மொழியாகப் பிரெஞ்சு மொழியை எடுத்துப் படித்தார். உயர்நிலைக் கல்வியை ‘செயின் ஜோசப் ஆஃப் குளினி’ யில் பிரெஞ்சுப் பிரிவில் 1949 -55 ஆண்டுகளில் முடித்தார். நான்கு வகுப்புகளை இரண்டே ஆண்டுகளில் முடித்து 1951-இல் பிரெஞ்சு ‘செர்த்திபிக்கா’ வில் தேர்ச்சி பெற்றார். அடுத்ததாக…

  • ந.மகேஸ்வரி

    மலேசிய பெண் படைப்பாளிகளில் குறிப்பிடும்படியானவரான ந.மகேஸ்வரி, கோலாலம்பூர் தலைநகரத்தில் நடேசன்- பாஞ்சாலைத் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். கோலாலம்பூரிலேயே பள்ளிக் கல்வியைப் பயின்றவர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியினை முடித்து, முதன் முதலில் கேலாக் கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதே பள்ளியில் பணிநிறைவு பெறும்வரை பணியாற்றினார். இவரது கணவர் வீ.நடேசன். இவர்களுக்குக் கணேசன் என் றொரு மகன். இவர் பொறி யியல் வல்லுநராகப் பணிபுரி கிறார். ந.மகேஸ்வரி, தனது எழுத்…

  • அ.முத்துலிங்கம்

    அ.முத்துலிங்கம், இலங்கை, கொக்குவில் கிராமத்தில் அப்பாதுரை-ராசம்மா தம்பதியர்க்கு 11.1.1937 அன்று பிறந்தார். 1959-இல் இளங்கலை விஞ்ஞானப் படிப்பை கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்தார். வாழ்க்கைத் துணையாக கமல ரஞ்சனியைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு சஞ்சயன், வைதேகி என இரண்டு குழந்தைகள். 1960-களில் கதை எழுதத் தொடங்கிய இவர், 1961-இல் ஓர் இலங்கை தமிழ் இதழ் நடத்திய சிறுகதைப் போட் டியில் ‘அக்கா’ என்ற கதையை எழுதிபரிசு பெற்றார். இவரது முதல் கதைத் தொகுதி ‘அக்கா’ 1964-இல்…

  • சங்கநதி பூ.அருணாசலம்

    சிங்கை சிப்புட், கங்கை பூலோ பகுதியில் பூமாலை உடையார் – இராமாயி தம்பதியருக்கு 8.4.1937 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் திருச்சி பகுதியிலிருந்து மலாயா வந்தவர்கள். கடலை வியாபாரம் செய்து வந்தனர். மாணவப் பருவத்திலேயே ‘தமிழ் முரசு’ இதழின் மாணவர் இதழான ‘மாணவர் மணி’யில் சிறுகதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். திரையரங்கில் வேலை செய்துகொண்டே கல்கண்டு, ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களை வாசித்து, எழுதும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 1956-இல் ‘தமிழ்நேசன்’ இதழில் வெளிவந்த…

  • பா.வெ.நாகராசன்

    கோவை, சலிவன் வீதி வெங்கடசுப்பு சாஸ்திரி – நாகலட்சுமி தம்பதியருக்கு 25.05. 1937 அன்று பிறந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, வட மொழி, கன்னடம் ஆகிய மொழியறிவு கொண்டவர். வடமொழி, இந்தி ஆகியவற்றை தம் இளமைப் பருவத்திலேயே பயின்றார். எஸ்.எஸ்.எல்.சி.யைத் தொடர்ந்து வானொலித் தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றிருந்தார். 1956-இல் 19-ம் வயதில் கோவை நகராட்சி வானொலி நுட்ப இயக்குநர் பணியில் சேர்ந்து 13 ஆண்டுகள் பணியாற்றினார். வானொலி மூடப் பட்டபின்,…

  • சாத்தூர் சேகரன்

    சாத்தூர் செல்லையா – சீனி வாசகத்தாய் தம்பதியருக்கு 25.10.1937 அன்று பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சந்திர சேகரன்(என்கிற) சங்கரலிங்கம். சாத்தூரில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், கல்லூரிப் படிப்பைசென்னை இலயோலா கல்லூரியில் தொடங்கினார். உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று 100-க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தார். “உலக நாகரிகங்கள் அனைத்தும் தமிழன் படைத்தவையே” என்று நிரூபித்து வருகின்றவர் என்ற போற்றுதலுக்கு உரிமையுடைய சாத்தூர் சேகரரின் பல்மொழிப் பயிற்சிக்கான விதை இலயோலா கல்லூரியில் விதைக்கப்பட்டது எனலாம். இக்காலகட்டத்தில்…

  • க.இராசவேலு

    திருவரங்கம்,கீழவாசல் அ.கந்த சாமி மேஸ்திரி – சின்னம்மை தம்பதியருக்கு 1936 கார்த்திகை மாதம் 5-ஆம் நாள் பிறந்தார். திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார். திருச்சி தேசியக் கல்லூரியிலும், தூய வளனார் கல்லூரியிலும் பயின்று 1956-இல் பொருளியலில் பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார். 7.11.1962 அன்று செண்பக வள்ளியை மணந்தார். இத்தம்பதியருக்கு வான்மதி என்றொரு மகளும், மணிவண்ணன், மதிவாணன், இளங்கோவன், ஆனந்த்பாபு ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்….

  • கு.சின்னப்பபாரதி

    நாமக்கல் பொன்னரிப்பட்டி பெருமாயி – குப்பணன் தம்பதியருக்கு 1935-இல் பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து, வழக்கறிஞராகும் விருப்பத்துடன் சென்னைக்குச் சென்றார். பேராசிரியர் மு.வ.வின் அறிவுரையின்படி ‘தமிழ் இலக்கியம்’ படித்தார். தோழர் ஆர்.கே.கண்ணன் தொடர்பு கிடைத்தது. அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். மாணவர் இயக்கத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் கவிஞர் தமிழ்ஒளி தொடர்பும் கிடைத்தது. கட்சி வேலைகளிலும், விவசாயிகள் சங்கம், ஆலைப் பாட்டாளிகள் சங்கப் பணிகளிலும் நேரடியாக ஈடுபட்டார். முக்கியமாக ‘சரஸ்வதி’ இதழ் விற்பனைக்குப் பாடுபட்டார். இ¢ப்படியாக…