எழுத்தாளர்

  • செ.திவான்

    திருநெல்வேலி செங்கோட்டை விசுவநாதபுரத்தில் நா.செய்யது மசூது – செ.காசினம்மாள் பீவி தம்பதியருக்கு 01.09.1954 அன்று பிறந்தார். விஸ்வநாதபுரம் எம்.எம். நடுநிலைப் பள்ளியிலும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்த இவர், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி யில் புகுமுகக் கல்வியையும், அந்நகரிலுள்ள தூய ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ., பட்டப் படிப்பையும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. (வரலாறு) பட்டத்தையும், 1989-இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ‘இந்திய சுதந்திரப் போரில்…

  • ஜெகாதா

    இராமநாதபுரம் ரெத்தினம் பிள்ளை – சண்முகத்தம்மாள் தம்பதியருக்கு 03.01.1956 அன்று பிறந்தார். இயற்பெயர் குமரவேலு. பள்ளியில் ரெ. குமரன். 1982-இல் திருவாடனையில் கூட்டுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். 1983-இல் அவரது அத்தை மகள் திலகவதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராதிகா, அருண்குமார் என இரு குழந்தைகள். ‘தமிழ்நாடு கூட்டுறவுத் தணிக்கைத்துறை அலுவலர் சங்கம்’, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ ஆகியவற்றில் முக்கிய பொறுப்பில் இருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் இணைந்து ‘அனைத்திந்திய முற் போக்கு எழுத்தாளர் சம்மேளனம்’ தொடங்கினார். பயிற்சி…

  • பிரளயன்

    திருவண்ணாமலையில் சண்முகசுந்தரம் – கல்யாணசுந்தரி தம்பதியர்க்கு 05.01. 1956-இல் பிறந்தார். 12-ம் வகுப்புவரை திருவண்ணாமலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை திரு வண்ணாமலை அரசு கல்லூரியிலும் பயின்றார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். 1979-இல் தஞ்சாவூரில் த.மு.எ.ச நடத்திய மூன்று நாள் நாடக விழாவில் சில நண்பர்களுடன் இணைந்து இரண்டு நாடகங்களை நடத்தினார். கல்லூரிக் கல்வி முடிந்தபின் பிரேம் சந்தின் ‘ராஜினாமா’ எனும் சிறுகதையை நாடகமாக்கினார். சோசலிச வாலிபர் முன்னணி மாநாட்டில்…

  • ஞாநி

    செங்கல்பட்டில் வேம்புசாமி – ஜெயலட்சுமி தம்பதியருக்கு 04.01.1954 அன்று பிறந்தார். இயற்பெயர்: சங்கரன். தந்தை பத்திரிகையாளர். செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் இவரைப் பேச்சு, எழுத்து, நடிப்பு துறைகளில் ஈடுபடுத் தியது. தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் படித்தபோது தமிழ்ப் பேரவை செயலரானார். ‘வம்பன்’ என்றொரு கையெழுத்து இதழை நடத்தினார். 12-வது வயதில் நாடகத்திலும் பங்கேற்றார். முதல் நாடகத்தில் நடித்த பாத்திரம் நிருபர். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, இந்தியன் எக்ஸ்பிரஸ்…

  • எஸ்.இராமச்சந்திரன்

    எஸ்ஸார்சி எனும் புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் எஸ்.ராமச்சந்திரன், கடலூர் மாவட்டம், தரும நல்லூர், சுந்தரேசன்-மீனாட்சி தம்பதியினருக்கு 04.03.1954 அன்று பிறந்தார். இவரது மனைவி பானுமதி. அஜாய் சுந்தர், லட்சுமண பாரதி என மகன்கள். கம்மாபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி, வளைய மாதேவி வள்ளலார் உயர் நிலைப் பள்ளி, கம்பாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில பள்ளிக் கல்வியும், புகுமுக வகுப்பு, இளநிலை அறிவியல் (வேதியியல்) பட்டப் படிப்பு ஆகியன சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், மதுரை…

  • மேலாண்மை பொன்னுச்சாமி

    விருதுநகர் மேலாண்மறைநாடு கிராமத்தில் ச.செல்லச்சாமி- அன்னபாக்கியம் தம்பதியருக்கு 1952-இல் பிறந்தார். விவசாயத் தினக்கூலிகள். சிறு வயதிலேயே பெற்றோர் இருவருமே அடுத்தடுத்து இறந்தனர். இவரது தம்பி கரிகாலன் சிறுகுழந்தை. இருவரையும் பாட்டி அரவணைத்தார். 5-ஆம்வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பஞ்சம் பிழைக்க தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். தஞ்சை தெருக்களில் சைக்கிளில் அலைந்து கடலை மிட்டாய் விற்றார். படிப்பு ஆர்வத்தினால் கையில் கிடைத்த செய்தித்தாள்கள், பொட்டலம் போடும் காகிதங்கள் எல்லாவற்றையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தார். மார்க்சியர்களின் தொடர்பும் அங்கே கிடைத்தது. அதனால்…

  • மா.நடராசன்

    பிறந்தது மாந்தே கவுண்டன்புதூர். பெற்றோர்: மாரப்ப கவுண்டர் – மாரியம்மாள். பிறந்த தேதி: 11.11.1952. 1960-இல் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், கம்பாளப்பட்டி, பல்லடத்தில் பள்ளிக் கல்வியையும் பயின்று, 1967-இல் பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் பி.யு. சி.யில் சேர்ந்தார். சிக்கண்ணா அரசு கல்லூரியில் பி.ஏ. தமிழ் பட்டம் பெற்றார். அக்கால கட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் நடராசன் கலந்து கொண்டு சிறை சென்று விடுதலையானார். கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1975-இல்…

  • திலகவதி

    தர்மபுரியில், கோவிந்தசாமி-சரசுவதியம்மாள் தம்பதியருக்கு 10.03.1951 அன்று பிறந்தார். தந்தை கோவிந்தசாமி இராணுவத்தில் பணிபுரிந்தவர். தாயார் சரசுவதியம்மாள் பள்ளி ஆசிரியை. வடஆற்காடு மாவட்டம் ஆக்சிலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1976-இல் இ.கா.ப. தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டின் முதல் பெண் இ.கா.ப. அதிகாரி எனும் பெருமைக்குரியவர் ஆனார். காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர், காவல்துறை கண்காணிப் பாளர், காவல்துறை உதவித் தலைவர், காவல்துறைத் தலைவர் (ஊர்க்காவல் படை…

  • தேனி சீருடையான்

    தேனியில் சுப்பையா – குருவம்மாள் தம்பதியருக்கு 6.4.1950-இல் பிறந்தார். இயற்பெயர் கருப்பையா. கருப்பையாவுக்கு 7-வது வயதில் பார்வை பறிபோனது. சென்னை, பூந்தமல்லியில் உள்ள பார்வை இழந்தோர் பள்ளியில் சேர்ந்து, ப்ரெயில் மொழியில் கல்வி கற்றார். ஆசிரியர்கள் ஆங்கிலக் கவிதை களையும் தமிழ் இலக்கியங்களையும் அவருக்கு வாசித்துக் காட்டினர். எஸ்.எஸ்.எல்.சி.யில் முதல் மாணவராய்த் தேர்ச்சி அடைந்தார். எனினும் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. தேனி பேருந்து நிலையத்தில் பொரி கடலை வியாபாரம், பழ வியாபாரம் செய்யத்…

  • ந.பாண்டுரங்கன்

    விருதுநகர் திருவில்லிபுத்தூரில் சிதம்பர வீரபத்திர நடராசன் – சாருமதி சகாய அம்மாள் தம்பதியருக்கு 19.06.1950 அன்று பிறந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (அரசியல், அறிவியல்) பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வரலாறு பட்டமும், நூலகச் செய்தி அறிவியல் பட்டமும் பெற்றார். 08.01.1971-இல் அரசு நூலகத்தில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். சின்னமனூர், சோழவந்தான் ஆகிய ஊர்களில் பணியாற்றியபின் மதுரை கிழக்கு கிளை நூலகத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில்…