சமயம்

  • ஊரன் அடிகளார்

    திருச்சி , சமயபுரம் கண்ணனூர், நரசிங்கமங்கலத்தில் இராமசாமிப்பிள்ளை – நாகரத்தினம் அம்மையாருக்கு 1933-இல் பிறந்தார். இயற்பெயர் குப்புசாமி. பள்ளி, கல்லூரி ஆவணங்களில் ‘என்.ஆர்.குப்புசாமி’ என்ற பெயரே இருக்கும். 1967-இல் துறவு பூணும்போது ‘ந. இரா. ஊரன்’ என்று மாற்றிக் கொண்டார். ‘ஊரன் அடிகள்’ என அனைவராலும் அழைக்கப்படு கிறார். சமயபுரம் எஸ்.கண்ணனூர், ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பைப் படித்தார். திருச்சி தேசிய கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். கரந்தைப் புலவர் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து படித்தார். அப்போது கல்லூரியைப்…

  • வேதாத்திரி மகரிஷி

    கூடுவாஞ்சேரியில் சின்னம்மாள்-வரதப்பன் தம்பதியருக்கு 14.08.1911-இல் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டு குடும்பத் தொழிலாகிய தறி வேலையில் ஈடுபட்டார். அவருக்கு ஏழோ, எட்டோ வயதில் கோலி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு பெரியவர் இவரை கூர்ந்து கவனித்தார். பின்னர், அச்சிறுவனின் நிலையைக் கேட்டறிந்து, தினமும் தன் னிடம் வந்து பஜனைப் பாடல் கற்றுக் கொண்டால் காலணா கொடுப்பதாகக் கூறினார். அப்பெரியவரே வேதாத்திரிக்கு முதல் குருவானார். அவர் ஒழுக்கம், நற்பண்புளைப் போதித்தார். பக்தி, பஜனை…

  • விபுலானந்தஅடிகள்

    ஈழத்து மட்டக்களப்பு மாகாணத்தின் காரைத்தீவு எனுமிடத்தில் சாமித்தம்பி – கண்ணம்மை இணையரின் மகனாக மயில்வாகனன் பிறந்தார். 1908-இல், அவர்தம் 16-ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் புலமைத் தேர்வில் தேர்ச்சியடைந்து, அதே கல்லூரியில் 1909-இல் ஆசிரியராகப் பணியேற்றார். 1911-இல் கல்முனை கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப் பணியில் அமர்ந்தார். அதே ஆண்டு கொழும்பிலுள்ள ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்று 1913-இல் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1915-16இல் இலங்கை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில்…

  • சிந்தனைச்சித்தர் சிவானந்தர்

    நெல்லை, பத்தமடையில் வெங்கு ஐயர்-பார்வதியம்மாள் தம்பதியருக்கு 08.09.1887 அன்று பிறந்தார். இயற்பெயர் குப்புசாமி. தந்தை எட்டையபுரம் சமஸ்தானத்தில் வருமான வரித்துறை அதிகாரி. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யில் 1905-இல் இண்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி அடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். படிக்கின்ற காலத்திலேயே அறுவை சிகிச்சை அறைக்குள், பெரிய மருத்துவர்கள் தங்களுக்கு உதவி மருத்துவராக குப்புசாமியை ஏற்குமளவுக்குத் திறமை பெற்றிருந்தார். மாணவப் பருவத்திலேயே ‘அம்புரோஷியா’ (அமிர்தம்) என்ற இதழைத் தொடங்கினார். அவரது மருத்துவம் சார்ந்த…