சி.ஆர்.ரவீந்திரன்
கோவை அவினாசி ஆட்டையாம்பாளையம் சிற்றூரில், ரங்கசாமி – லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 20.11.1945 அன்று பிறந்தார். வறுமையான விவசாயக் குடும்பச் சூழல். கோவை பூ.சா.கோ கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ‘டியூட்டர்’ஆகப் பணியாற்றினார். செட்டிபாளையம் ரங்கசாமி ரவீந்திரன் என்பதன் சுருக்கமே சி.ஆர்.ரவீந்திரன். இவரின் முதல் சிறுகதை ‘இரவின் பூக்கள்’ இலங்கையிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’யிலும், முதல் கவிதை ‘காலச்சுவடு’ சென்னையிலிருந்து வெளிவந்த ‘கண்ணதாசன்’ இதழிலும் அடுத்தடுத்து வெளியாகின….
