ஆர்வலர்

  • ஸ்டாலின் குணசேகரன்

    ஈரோட்டிலுள்ள மாணிக்கம் பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு சமூகப் போராளி. சிறந்த புத்தகப் படிப்பாளி. ஸ்டாலின் குணசேகரன் பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே, தன் சொந்தக் கிராமத்தில் 32 மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவர் முன்னேற்ற சங்கம்’ உருவாக்கினார். பின்னர் இந்தியா அளவிலான ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்ற’த்திலும் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டார். 1979- 80ஆம் கல்வியாண் டில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின்மாணவர் பேர வைத் தலைவராகவும், ஈரோடு…

  • டத்தோ ஹாலிதஸ்லீம்

    இராமநாதபுரம் அழகன்குளத்தில் அ.மு.இப்பு ராயிம் – மசுக்கா பீவி தம்பதி யருக்கு 25.12.1949 அன்று பிறந்தார். ஐந்தாவது வயதில் தந்தையின் வியாபாரம் தொடர்பாக மலாயாவிற்குக் குடிபெயர்ந்தனர். தமிழகம், கல்கத்தா, கான்பூர் போன்ற பகுதிகளில் தோல் தொழில்நுட்பம் கற்றார். மலேசியாவின் தோல் தொழில்நுட்பம் தொடர்பான முதல் நிபுணர் ஆனார். ‘ஹை பாயிண்ட்’ எனும் பிரிட்டிஷ் முதலீட்டு நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநராகப் பணிபுரிந்த தஸ்லீம்,1993-இல் அந்நிறுவனத்தின் 30 விழுக்காடு பங்கினை வாங்கினார். அத்துடன் படிப்படியாக முயற்சித்து 2000-இல் அந்நிறுவனத்தை…

  • ஆ.வே.இரா. கிருட்டிணசாமி

    நாமக்கல் மாவட்டம், ஆலத் துடையான்பட்டியில் வசித்த ஏ.வெங்கடாசலம் – செல்லம்மாள் தம்பதியருக்கு 11.04.1928-இல் பிறந்தார். 1943-இல் எட்டாம் வகுப்பு வரையே படித்து, ஒன்பதாண்டு உழவுத் தொழிலுக்குப் பிறகு பன்மொழிப் புலவர் த.சி. சகந்நாதன் தூண்டுதலில் 1953-இல் திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்ந்து 1957-இல் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு வைரி செட்டிப்பாளையம் சுவாமி விவேகானந்தர் வித்தியாலயா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். இப்பள்ளியிலேயே 32 ஆண்டுகள் பணியாற்றி 1989-இல் பணி நிறைவுப் பெற்றார். 10.02.1960 அன்று…