சமய அறிஞர்

  • ஸ்ரீஅரவிந்தர்

    ஸ்ரீ அரவிந்தர், கல்கத்தாவில் டாக்டர் கிருஷ்ண தனுகோஷ் – ஸ்வர்ணலதா தேவி தம்பதி யருக்கு 15.8.1872 அன்று பிறந்தார். 1879-இல் குடும்பத் தினரால் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மான்செஸ்டரில் ட்ருயெட்ஸ் குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டார். 1983 வரை ட்ருயெட்ஸிடம் லத்தீன், பிரெஞ்சு மொழிகளைக் கற்று புலமை பெற்றார். ‘மகாஸின்’ என்னும் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1884 – 89இல் இலண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் படிக்கும்போது பல பரிசுகளைப் பெற்றார். 1890-இல்ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி…

  • ஸ்ரீசிவப்பிரகாசர்

    காஞ்சியில், 400 ஆண்டுகளுக்கு முன்பு சைவ வேளாண் குலத்தினருக்கு தீட்சா குருவாய் விளங்கிய குமாரசாமி தேசிகரின் மகனாக கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ சிவப்பிரகாசர் தோன்றினார். சிவப்பிரகாசர் தம் தம்பியருடன் திருவண்ணாமலைக்குச் சென்று குருதேவரை வழிபட்டு, அங்கேயே தங்கியிருந்து தமது கல்வியைக் கற்றார். அவ்வமயம் அண்ணாமலையாரைப் போற்றி ‘சோண சைலமாலை’ இயற்றினார். பின்னர் திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயிலில் ‘திருச்செந்தில் நீரோட்டகயமக அந்தாதி’ என்னும் நூலைப் பாடினார். திருவெங்கனூர் திருவெங்கை நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘திருவெங்கைக்…