| Profession | சமூக ஆர்வலர் |
|---|
வசந்தி தேவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் வசந்தி தேவி, தமிழகத்தின் முன்னணி கல்விச் சிந்தனையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமைப் போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் பங்காற்றியுள்ளார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் செயல்பட்டு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகளை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்காற்றிய சமூக ஆளுமை இவராவார்.